September

இரத்தப்பழியை நீக்கும் அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 21:1-9) “கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்” (வச. 8). நிலம் கர்த்தருக்குச் சொந்தமானது, அதில் வாழும் மக்கள் வாடகைதாரர்கள். மக்களுடைய பாவங்கள் கர்த்தரைத் துக்கப்படுத்துவது மட்டுமின்றி நாட்டையும் அசுத்தப்படுத்துகிறது. இஸ்ரயேலில் அப்பாவிகளின் இரத்தம் சிந்தப்படுவது ஒரு மோசமான குற்றச்செயல் (உபா. 19:10,13). காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தபோது, பூமி ஆபேலின்…

September

ஆவிக்குரிய போரின் அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 20:1-20) “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; … உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வச. 1). இஸ்ரயேலர்களின் வாழ்க்கையில், தேவன் வாக்குறுதி அளித்த நாட்டைக் கைப்பற்ற போர் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக இருந்தது (வச. 1). ஆயினும் போர் நம்முடையதன்று, அது கர்த்தருடையது. ஆகவே, ‘அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்’…

September

நீதிசெய்வதில் தேவனைப் பிரதிபலித்தல்

(வேதபகுதி: உபாகமம் 19:14-21) “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.” (வச. 15). தேவனுடைய நியாயப்பிரமாணச் சட்டங்கள் அவருடைய இயல்பையும் குணநலனையும் பிரதிபலிக்கின்றன. ஒரு நீதியுள்ள நியாயாதிபதியாக, தேவன் தம்முடைய ராஜ்யத்தின் தன்மைகள் சரியான நீதியோடும் நியாயத்தோடும் இருக்க வேண்டுமென விரும்புகிறார். ஒரு நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை பரிபூரண நீதியிலும் நேர்மையிலும் நிலைநிறுத்தும்படிக்கு பூமிக்கு திரும்புவார்…

September

பழிவாங்குதலுக்குத் தப்புதல்

(வேதபகுதி: உபாகமம் 19:1-13) “அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு … ” (வச. 10). தேவன் நமக்குக் கிருபையாய் கொடுக்கிற வாழ்க்கையை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை மட்டுமின்றி, நம்மைச் சுற்றியிருக்கும் சூழலும் தூய்மை காக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தம்முடைய மக்களுக்காக அவர் கொடுக்கிற சுதந்தர பூமி நிரபராதிகளின் ரத்தத்தால் மாசுபடக்கூடாது என்பதில் ஆண்டவர் அக்கறை கொண்டிருந்தார்.…

September

கிறிஸ்துவே மெய்யான தீர்க்கதரிசி

(வேதபகுதி: உபாகமம் 18:9-22) “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (வச. 15). கானானியர்கள் தங்கள் வழிகாட்டுதலுக்காக குறிசொல்லுகிறவர்களையும், நாள்பார்க்கிறவர்களையும், அஞ்சனம் (சகுனம்) பார்க்கிறவர்களையும், சூனியக்காரர்களையும், மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரர்களையும் நம்பி அவர்களையே நாடினார்கள் (வச.10,11). ஆனால் கர்த்தர் தம்முடைய மக்களுக்காக இப்படிப்பட்டவர்களை நியமிக்காதது மட்டுமின்றி, இவர்களைத் தடையும் செய்தார் (வ. 14). மாறாக, மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவதாக அவர் வாக்களித்தார்…

September

கர்த்தரே அவர்களுடைய சுதந்தரம்

(வேதபகுதி: உபாகமம் 18:1-8) “அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்” (வச. 2). இஸ்ரயேலர்கள் ஒரு நாடாக கர்த்தருக்கு “ஆசாரிய ராஜ்யமாகவும், பரிசுத்த ஜாதியாகவும்” இருக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது (யாத். 19:6). ஆனால் அவர்கள் தேவனுடன் நெருங்கிச் சேருவதற்குப் பயந்து, மோசே எங்களுக்கு ஒரு மஸ்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று கோரினர் (யாத். 20:19). எனவே தேவன் அவர்களுக்கு ஓரு குறிப்பிட்ட கோத்திரத்தார் வாயிலாக ஒரு…

September

உங்களுக்கென ஒரு வேதாகமம் இருக்கிறதா?

(வேதபகுதி: உபாகமம் 17:14-20) “நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்பாயானால்” (வச. 14). இஸ்ரவேல் நாடு தேவனின் நேரடி ஆட்சியை நிராகரித்து, ‘எங்களைச் சுற்றியிருக்கும் பிற நாடுகளைப் போல எங்களுக்கும் ஓர் அரசன் வேண்டும்’ எனக் கூறி, கீஷின் மகன் சவுலை தேர்ந்தெடுப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இறையாண்மையுள்ள தேவன் உபாகமப் புத்தகத்தில் இதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்தி வைத்துவிட்டார். இஸ்ரவேலுக்கான அரசாட்சி பற்றிய கருத்தும்…

September

அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல்

(வேதபகுதி: உபாகமம் 17:1-13) “உன் வாசல்களில் இரத்தப் பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக் குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து உன் தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தின ஸ்தானத்துக்குப் போய்… (வச. 8). வேதம் நம்முடைய யதார்த்தமான வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக இராவிட்டால் அதனால் ஒரு பயனுமில்லை. அது ஒரு கற்பனைப் புத்தகமன்று. தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படுகிற குறைவுகள், பிரச்சினைகள், மோதல்கள், வழக்குகள் ஆகிய யாவற்றுக்கும் தீர்வைத் தருகிறது. நாம்…

September

நீதியுடன் நியாயம் செய்தல்

(வேதபகுதி: உபாகமம் 16:18-22) “உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிளெல்லாம், நியாயாபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்யக்கடவர்கள் (வச. 18). நீதியுள்ள தேவனின் பிள்ளைகள் தங்கள் அனுதின வாழ்க்கையில் நீதியைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் குடியேறிய பிறகு, தங்களுடைய சமுதாயத்துக்குள் நிர்வாக முறைகள் திறம்பட இருக்க வேண்டும் என்பதை தேவன் உறுதிப்படுத்துகிறார். நீதி பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். முகத்தைப் பார்த்து, ஆட்களை மதித்து,…

September

கர்த்தருக்கு முன்பாகச் சந்தோஷப்படுதல்

(வேதபகுதி: உபாகமம் 16:9-17) உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், … உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு (வச. 11). பஸ்கா பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரயேல் நாட்டின் சமய நாட்காட்டி நிறுவப்பட்டது (யாத். 12:2). பஸ்காவே தொடர்ந்து நடைபெற்ற அனைத்திற்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த மீட்பின் நிகழ்வே அவர்களுடைய ஒவ்வொரு தேசிய ஆசரிப்புக்குமான சாராம்சத்தை வழங்குகிறது. இன்று அது…