1. ஒரு தேவியின் பெயர். அசீரிய ராஜா செப்பர்வியரையும்,
செப்பாவாமியரையும் கொண்டுவந்து, சமாரியாவில் குடியேற்றினான். அவர்கள் தங்கள்
தேவர்களாகிய, அத்ரமலேக்கையும், அன்னமலேக்கையும் கொண்டுவந்து, அவைகளைச் சேவித்து,
பிள்ளைகளையும் தகனபலி கொடுத்தார்கள் (2.இராஜா.17:31). யூதரும் இவைகளை
வணங்கினதாகத் தெரிகிறது.
2. சனகெரிப் என்பவனின் இரண்டு குமாரர் அவனை
நினிவேயிலிருந்த ஒரு கோயிலில் வெட்டிக்கொன்றார்கள். அவர்களில் ஒருவனுடைய பேர்
அத்ரமலேக்கு (2.இராஜா.19:37, ஏசா.37:38).