அதோனீராம் (Adoniram)
(கர்த்தர் மேன்மையடைந்தார்)

இவனுடைய பெயர் அதோராம் என்றும் குறித்துள்ளது (2.சாமு.20:24, 1.இராஐh.12:18).
இவன் தாவீது, சாலோமோன், ரெகொபெயாம் என்பவர்களின் பகுதி விசாரிப்புக்காரன்
(2.சாமு.20:24, 1.இராஐh.4:6). ரெகொபெயாம் பகுதிகள் வாங்கும்படி இவனை
அனுப்பினபோது இஸ்ரவேலர் கலகம் பண்ணி, இவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்
(1.இராஐh.12:18, 2.நாளா.10:18).