யூன் 20
யூன் 20 நீங்கள் வலுதுபுறமாய்ச் சாயும்போதும் இடதுபுறமாய்ச் சாயும்போதும். வழி இதுவே, இதிலேநடவுங்கள், என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்(ஏசா.30:21). பலநேரங்களில் நாம் நமது பாதையைத் தெரிந்தெடுப்பதில் கஷ்டப்படுகிறோம். இவ்வழியில்செல், அவ்வழியில் செல் என்று பலரும் ஆலோசனைகள் தருகிறார்கள். செயலறிவு ஒரு வழியையும்,விசுவாசம் மற்றொன்றையும் நமக்குக் காட்டுகின்றன. இந்நேரங்களில் நாம்அமர்ந்திருக்கவேண்டும். குறுக்கீடுகளை அமர்த்திவிட்டு, ஆண்டவரின் முன்னிலையில் நம்மைநிதானப்படுத்தி அமைதியாயிருக்கவேண்டும். வேதாகமத்தை எடுத்து கருத்துடன் பக்தியோடுவாசிக்கவேண்டும். அவருடைய முகத்தின் திருவொளிக்கு நேராக நம்மை உயர்த்தி…