May

மே 23

மே 23

… அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள்ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களைநீங்கலாக்கி விடுவிக்கிறார் (சங்.107:27-28).

கவலை காட்டும் நெற்றியுடன், கிறிஸ்தவனே,

இக்கட்டு நிலையை நீ அடைந்திட்டாயோ?

கவலையனைத்தும் உன்முன் சேர்ந்ததுமே

இன்றுன்னை வாட்டுமென்றெண்ணுகிறாயோ?

கடினப்போரில் நீ தனித்து நின்றிடுகையில்

இவ்வுலகெலாமுனை எதிர்த்துள்ளதோ,

கர்த்தாவினாற்றல் இக்கட்டுநிலையின்

இன்றும் தோன்றும் அறிந்திடுவாய் நீயே.

இக்கட்டு நிலையில் இன்று நீயுள்ளாயோ?

துயர் நோவினால் நீ அந்தகனாயிட்டாயோ?

இன்னல்தனை சகித்திட உன்னாலியலாதோ

உடலுழைப்பின் சோர்பினை நீ தாங்கிடாயோ?

தொடர் துன்பமுன்னைக் காயப்படுத்தி, நீ

உணர்வற்று மயக்கமுறச் செய்திட்டதோ?

தொல்லைமிகும் உன் இக்கட்டு நிலைக்கே

தாமும் வந்திட ஆசிக்கிறார், இயேசுவே!

உன் பணி உன்முன் விரித்து இக்கட்டுநிலையில்

நின்று திகைத்திடும் மகனே, உன்முன்

உன் மூளை, இதய அழுத்தம் முற்றும் பெறாத்

துன்பம் இவையுனக்குத் தருகின்றதோ?

உனக்காற்றல் தேடி நீயும் உன் கரங்களை

இறைமகன் நோக்கி விரித்துத் தேடிடுவாயோ?

உன் பாரம் தாங்க அவா காத்து நிற்கிறார்

உனஇ இக்கட்டு நிலைதனை மாற்றிட அறிந்திடு.

இக்கட்டு நிலையில் நீ நிற்கின்றாயோ?

இன்று நீ நிற்கும் அந்நிலையியேயே

எக்காலும் விட்டிடார் உன் நேசர், அவர்தம்

எல்லையில்லா அற்புத ஆதாரங்களுடனுள்ளார்.

உன் பாதை உளியாகும், கால்கள் திடம் பெறும்,

புதியதாய் தோன்றுமுன் பாதையிலே

உன் நெருக்கடி நிலையில் நீ இருக்கையில்தான்,

யாவும் வல்ல ஆண்டவர் ரூபிக்கப்படுவார்.

சோர்வடைந்திடாதே,சாவிக்கொத்திலுள்ள கடைசிச் சாவியே, ஒருவேளை கதவைத் திறக்கும்.