May

மே 6

மே 6

கர்த்தருடைய இரகசியம்அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது (சங்.25:14).

தெய்வச் செயலால் நடக்கும்நிகழ்ச்சிகள் பலவுண்டு. அவை வெளிநோக்கிற்கு மிகப் பயங்கரமானவையாகவும்,கொடுரமானைவையாகவும் தோன்றும். ஆனால் ஆண்டவருடைய பிள்ளைகள் அவைகளினின்று பல இரகசியங்களைஅறிந்துகொள்ளக் கூடும். இவைகள்விசுவாசம் ஆழ்ந்து நோக்கி, இது ஆண்டவருடைய இரகசியம் என்று கூறுகிறது. விசுவாசியாதவன்மேல்போக்காகத்தான் பார்க்கிறான். விசுவாசியோ, கூர்ந்து நோக்கி, மறை பொருளைக்காண்கிறான்.

விலையேறப்பெற்ற வைரங்களைச் சில வேளைகளில் சாதாரணமாகத் தோன்றும் பொட்டலங்களில்அனுப்புவார்கள். அப்பொழுது அவற்றின் மதிப்பு வெளியில் தெரியாது. ஆரம்ப காலத்தில் இஸ்ரவேலர் ஆண்டவரைத் தொழுதுவந்த ஆசரிப்புக் கூடாரம் வனாந்தரத்தில் அமைக்கப்பட்டபொழுது,அதன் வெளிப்புறம் விலையேறப்பெற்றதாகத் தோன்றவில்லை. அது கவற்சியற்ற வெறும் தகசுத்தோலினால்தான் செய்யப்பட்டிருந்தது. கூடாரத்திற்குள்ளிருந்த விலையேறப்பெற்ற பொருள்கள்ஒன்றாகிலும் வெளியிற் காணப்படவில்லை.

அருமைநண்பனே, ஆண்டவர் உனக்கு விலை மதிப்பற்ற பொருள்களைத் தரலாம். சாதாரணப்பொட்டலங்களில் வரும் அவைகளைப்பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவற்றுள்அன்பு, பாசம், ஞானம் நிரம்பிய வெகுமதிகள் மறைந்து உள்ளனவென்று நீ உறுதியுடனிருக்கலாம்.அவர் அனுப்புவதை நன்றியுடன் நீ ஏற்றுக்கொள். அவைகளிலுள்ள நலன்களை கொண்டு நீ அவரைநம்பினால் இருளிலுங்கூட அவருடைய செயல்களின் இரகசியத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியும்.

எல்லாத்தறிகளும்நிற்குமட்டும், அவற்றின்

எல்லா ஓடங்களும் ஓடாது நின்றிடுமட்டும்

இறைவன் தம் நெசவுப்படத்தை

மறைத்தே வைத்து இருப்பார்.

அவர் நெசவுப்படத்தின் தேவைகள்

அவர் தெளிவு செய்யும் பன்னிற நூல்கள்,

பொன் நூலும், வெள்ளிச்சரிகையும்.

பொருந்தவே நெய்திடுவார் தம் ஆடைதனை.

கிறிஸ்துநாதரைத் தலைவராகக் கொண்டவன், எத்தகைய சூழ்நிலையிலும் தலைவனாகவே இருப்பான். உனதுசூழ்நிலைகள் உன்னை அழுத்துகின்றனவா? அவற்றை ஒதுக்கித் தள்ளாதே. அது பரம குயவருடைய கரம்.அது உன்னைப் பாத்திரமாக வனைய முற்பட்டுள்ளது. அச் சூழ்நிலைகளைத் தடுக்கவேண்டாம்.அவைகளைச் சகித்து, அவற்றின் கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதினாலேயே நீ அவைகளை வென்றிடலாம்.ஏனெனில் அவை உன்னை அழகிய, மதிப்பிற்குரிய பாத்திரமாக மாற்றுவது மட்டுமல்ல, உனது ஆதாரவளங்கள் அனைத்தையும் உனக்குக் கிட்டுமாறு செய்யும்.