March

மார்ச் 26

நீ இருக்கிற இடத்திலிருந்துவடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். நீ பார்க்கிற இந்தப்பூமி முழுவதையும் நான் உனக்கு…. (கொடுப்பேன்). (ஆதி.13:14-15)

பரிசுத்த ஆவியானவர் தாம்நிறைவேற்ற நோக்கம் கொள்ளாத எந்த உணர்ச்சியையும் உன்னில் உருவாக்கமாட்டாh. உன்விசுவாசம் எழும்பி, உயரப் பறந்து, காணும் பூமியையெல்லாம் உரிமையாக்கிக்கொள்ளட்டும்.

விசுவாசக் கண்களோடு நீகாண்பவை யாவும் உன்னுடையவை. நீ பார்க்கக்கூடிய தூரம் பார். ஏனென்றால் அவை யாவும்உன்னுடையவையே. நீ கிறிஸ்தவனாயிருக்க என்னென்ன குணம் தேவையென்று விரும்புகிறாயோஅவைகளும், நீ கர்த்த்தருக்காக என்னென்ன செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறாயோ அவைகளும்விசுவாசத்தால் கைகூடி வரத்தக்கவைகளே. ஆகையால் நீ உன் வேத புத்தகத்தை உன்முன் திறந்துவைத்து, உன்னுடைய ஆத்தமா பரிசுத்த ஆவியின் வல்லமைகளைப் பெறவும், நீ முழுமையாய் அவர்பிரசன்னத்தால் ஞானஸ்நானம் பெறவும், இன்னும் அவரண்டை நெருங்கி வா. நீ அவருடையபூரணத்துவத்தை விளங்கிக்கொள்ளும்படி அவர் உன்னை அறிவுள்ளவனாக்கும்போது அதை உனக்காகவேவைத்திருக்கிறார் என்று நம்பு. கர்த்தருடைய வார்த்தையாகிய வாக்குத்தத்தங்கள் யாவும், அவர்உன்னில் எழுப்பும் எல்லா ஆசைகளும் கிறிஸ்துவைப் பின் தொடருகிறவனாக, நீஎப்படிப்பட்டவனாயிருக்கக் கூடும் என்று நினைக்கிறாயோ, அதற்கேற்ற நற்குணங்கள் யாவும்உன்னுடையவைகளே என்று ஏற்றுக்கொள். நீ பார்க்கும் பூமியெல்லாம் உனக்குக்கொடுக்கப்பட்டவையே.

அவருடைய கிருபையின்தற்சொரூபமான அனுபவம், உள்ளான தரிசனத்தால் வருகிறது. பட்சிக்குக் கோடையின் வெயிலைத்தேடி தென் திசை செல்லவேண்டும் என்ற உணர்ச்சியைக் கொடுப்பவர் அதை வஞ்சிக்கமாட்டார்.அவைகளின் உள்ளத்தில் அந்த உணர்ச்சியை எ;வளவு நிச்சமாய் உண்டாகச் செய்தாரோ, அதேநிச்சயமாய் தென்றலையும், பசுமையையும் உண்டாக்கும் வெயிலையும், அது அங்குச் சேரும்போதுசந்திக்க வைக்கிறார்.

தெய்வீக நம்பிக்கையை நம்உள்ளத்தில் ஊற்றுகிறவர் அதை நிறைவேற்றத் தேடும்பொழுது நம்மை ஏமாற்றமாட்டார்.தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டார்கள் (லூக்.22:13).