March

மார்ச் 24

பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாயிருக்கிறவரே, உன்தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்றுஎன்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,… என்னை தப்புவியும். நான் பயந்திருக்கிறேன்என்றான் (ஆதி.32:9-11).

மேற்குறித்துள்ளவேண்டுதலில், அநேக ஆரோக்கிய நற்குறிகளைக் காண்கிறோம். நம்முடைய ஆவி துன்பம் என்னும்உலையில் காய்ச்சப்படும்பொழுது இவ்விதமாய் ஜெபிக்கலாம் என்ற முறையைக் காட்டுகிறது.

நீர் சொல்லியிருக்கிறீர்என்று முதலில் அவருடைய வாக்குத்தத்தை எடுத்துரைக்கிறான் (ஆதி.32:9,12). இவ்விதமாக இரண்டுமுறை சொல்லுகிறான். அப்படியானால், தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களால், நாம் அவரைக்கிட்டிச் சேரத்தக்கதாகச் செய்திருக்கிறார். நாம் அவரை பார்த்து, நீர்சொல்லியிருக்கிறீர் என்று சொல்லும்பொழுது, அவர் இல்லையென்று சொல்லமுடியாது. அவர் கூறியபடிஅவர் செய்யவேண்டும். ஏரோது தன் வார்த்தையைக் காப்பாற்ற அவ்வளவு கருத்தாயிருக்கும்பொழுது,தேவன் அப்படியிருக்கமாட்டாரா? நீங்கள் ஜெபிக்கும்போது, ஒரு வாக்குத்தத்ததின்மீதுதிட்டமாய் காலூன்றி நில்லுங்கள். அப்போது உங்களுக்குப் பரலோகத்தின் வாசல்களைத்திறந்து அதை வலுவில் பெற்றுக்கொள்ள உரிமை கிடைக்கும்.

நாம் நம்முடையவேண்டுதல்களில் திட்டமாகக் குறிப்பிட்ட ஒரு காரியத்திற்காகக் கேட்க வேண்டும், என்று இயேசுவிரும்புகிறார். நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று மனதாயிருக்கிறாய்? அவர்தம்மிடத்தில் துன்பத்திலும் சோதனையிலும் வருகிறவர்களைக் கேட்கிற கேள்வி இது.திட்டமான விடை வேண்டுமென்றால், திடமான ஊக்கத்தோடு வேண்டுதல் செய்யுங்கள். ஒருநோக்கமுமின்றி வேண்டிக்கொள்வதே அநேக ஜெபங்களுக்கு விடை அருளப்படாததுபோல்காணப்படுவதற்கு காரணம். உங்கள் வேண்டுதல்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுக்குமாறுஉங்கள் காசோலையை நிரப்புங்கள். அது இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும்பொழுதுபரலோகச் சேமநிதியிலிருந்து உடனே பணம் பெறலாம். கர்த்தரிடம் திட்டவட்டமாய்க்கேட்கத் தைரியமாயிருங்கள்.

ஏவாகேல் அம்மையார்பின்வருமாறு கூறியுள்ளார்: கிறிஸ்தவ ஜீவியத்தில் நமக்குக் கிடைக்கும் ஆறுதல், இன்பம்,ஆற்றல் எல்லாம் ஒரே ஒரு செயலைச் சார்ந்திருக்கின்றன. இது என்னவென்றால், தேவனுடையவார்த்தையை அப்படியே நம்பவேண்டும் என்பதே. தேவன் தமது அன்பையும், அருளையும் நமக்குத்தெரிவிப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளைச் சிறிதும் மாற்றாமல் முழுவதுமாகஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த உண்மையை நான் உலகில் வாழ்ந்த ஒவ்வொரு ஆண்டிலும் ஏன்ஒவ்வொரு நாளிலுமே தெளிவாக உணர்ந்து கொண்டு வருகிறேன்.

கிறிஸ்துவின் வார்த்தை,கிறிஸ்துவின் வாக்குத்தத்தம், கிறிஸ்துவின் பலி, கிறிஸ்துவின் இரத்தம் இவைகளைக்கொண்டு வா. அப்பொழுது விண்ணின் ஆசீர்வாதங்களில் ஒன்றும் உனக்கு மறுக்கப்படாது.