March

மார்ச் 3

அப்பொழுது அது (அசுத்தஆவி) சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்துப்புறப்பட்டுப்போயிற்று (மாற்.9:26).

தீமைபோராட்டமில்லாமல் நம்மை விட்டுப்போகாது சந்தோஷமான வனபோஜனத்திற்குரியஅனுபவத்தினால் நாம் பரிசுத்த ஆவியானவரின் சுதந்திரத்தைப் பெறமுடியாது. எப்போதும்போர் செய்தே பெறவேண்டும். ஆத்துமாவின் இரகசிய பீடத்தில் இப்படியே நடந்து வருகிறது.நமது உள்ளத்தில் ஒவ்வொரு சக்தியும் மிகுந்த துன்பத்தின் மூலமாகவே ஆவிக்குரிய விடுதலையைஅடைகிறது. மரியாதையான விண்ணப்பத்தினால் அப்போலியோனை (மோட்சப்பயணம் என்னும்நூலில் கிறிஸ்தியானை எதிர்த்த பிசாசை) அப்பால் போகச் செய்ய இயலாது. அவன் வழியைமறைத்து காலை விரித்துக்கொண்டிருக்கிறான். நாம் முன்னேறிச் செல்லும் வழியில் இரத்தமும்கண்ணீரும் சிந்தப்படவேண்டும். இதை நாம் எப்பொழுதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். இல்லாவிடில்நாம் ஜீவியத்தின் ஏனைய கஷ்டங்களோடு, தப்பர்த்தப்படுத்திக்கொள்ளுதல் என்ற கஷ்டத்தையும்கூட்டிக் கொள்ளுகிறவர்களாவோம். மிருதுவான, பாதுகாப்பான சிறுவர் அறையில் நாம் மறுபடியும்பிறப்பதில்லை. புயலில் பயங்கரமான திறந்த வெளியில் பிறக்கிறோம். அநேகத்துன்பத்தின் வழியாய் நாம் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்.

நம்பிதாக்களின் விசுவாசத்தினாலே சிறைக்கும் நெருப்புக்கும் வாளுக்கும் தப்பி நீ இன்னும்அழியாதிருக்கிறாய்.

விசுவாசம்என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் இதயங்கள் களிப்பால் நிரம்புகின்றன. நம்பிதாக்கள் விலங்கிடப்பட்டுச் சிறையிலிருந்தாலும் இதயத்திலும் மனசாட்சியிலும்சுதந்தரமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளாகிய நாமும் உமக்காய் நம்முயிரையும்கொடுக்கக்கூடியவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.