June

யூன் 20

யூன் 20

நீங்கள் வலுதுபுறமாய்ச் சாயும்போதும் இடதுபுறமாய்ச் சாயும்போதும். வழி இதுவே, இதிலேநடவுங்கள், என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்(ஏசா.30:21).

பலநேரங்களில் நாம் நமது பாதையைத் தெரிந்தெடுப்பதில் கஷ்டப்படுகிறோம். இவ்வழியில்செல், அவ்வழியில் செல் என்று பலரும் ஆலோசனைகள் தருகிறார்கள். செயலறிவு ஒரு வழியையும்,விசுவாசம் மற்றொன்றையும் நமக்குக் காட்டுகின்றன. இந்நேரங்களில் நாம்அமர்ந்திருக்கவேண்டும். குறுக்கீடுகளை அமர்த்திவிட்டு, ஆண்டவரின் முன்னிலையில் நம்மைநிதானப்படுத்தி அமைதியாயிருக்கவேண்டும். வேதாகமத்தை எடுத்து கருத்துடன் பக்தியோடுவாசிக்கவேண்டும். அவருடைய முகத்தின் திருவொளிக்கு நேராக நம்மை உயர்த்தி அவர் நமக்குத்தரும் தீர்ப்பு ஏதோ எனக்கு காத்திருக்கவேண்டும். வெகு விரைவில் அவருடைய இரகசியமானஆலோசனைகள் ஒரு திட்டவட்டமான எண்ணத்தை நம்மில் பிறப்பிக்கும்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இதை மட்டும் சார்ந்திருப்பது ஞானமல்ல,சந்தர்ப்பங்கள் இதனுடன் இணைந்து வருவதையும் நாம் நோக்கவேண்டும். ஆண்டவருடன் அதிகமாகத்தொடர்புகொண்டவர்கள் அவருடைய சித்தத்தை அறிய அவரோட இரகசியமான தொடர்புகளைக்கொண்டிருப்பதன் மேன்மையை அறிவார்கள்.

உனதுபாதையைத் தெரிந்துகொள்ளக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாயோ? உனது பிரச்சனையுடன்ஆண்டவரிடம் செல். அவருடைய இசைவையோ மறுப்பையோ தெரிந்துகொள்.

ஆத்துமாவே, அமைதியாய் நில்,

ஆண்டவர் தம் ஆணையிது அறிந்திடு,

உன்வழி மறைந்திருக்கும் பொழுதும்

உன்ஆண்டவர் கரங்களிலதை விடு.

வலியனஅவர் கரங்கள்தாமே

வலியகடலையுமது பிளந்திடுமே,

ஆன்மாவே, நீ அமர்ந்திருப்பின்.

ஆண்டவர் செய்வார் இயலாததையும்.

பெரியவர் அவர் விடுவித்திடுவார்.

அமர்ந்திரு நீ இருக்கும்படி அமர்ந்திரு.

அறிவுக்கடங்கா வழியிலுன்னை, நீ

அறியாத தொல்லைகள் சூழ்ந்திட,

அல்லலில் இத்தொல்லை அவதி தந்திடில்,

நீஅமைதியுறும் வரை ஆண்டவர்

நினக்குதவி செய்திட இயலாது,

உன்னிலவர் செய்வாரே தம்

உயர்சித்தமதை அப்பொழுது.

உன்இதயம் சித்தமனைத்தையும்

உன்ஆண்டவர் வளைத்திட விட்டிடு.

ஆத்துமாவே, நீ அமர்ந்திருக்கையிலே,

ஆண்டவர், தம்மை வெளிப்படுத்துவார்.

உன்மூலம் அவரன்பு அருளொளி விளங்கும்,

உன்மூலம் அமைதியிலவர் செயலாற்றுவார்.

உன்னைச் சுற்றும் மக்களை ஈந்திடுவார்.

உன்மூலம் அவர் தாம் போதித்திடுவார்.

தம்வலிமைதனை உன்னில் விளக்கிடுவார்.

தம்ஆற்றலை உன் பெலவீனத்தில் காட்டிடுவார்.

ஆன்மாவே, அதனால் அமர்ந்திருந்தே இரு

ஆண்டவர் செயலாற்ற வழி விடு.

அமர்ந்திரு, ஆன்மாவே விசுவாசத்தின்

அடிப்படை பெற்று நீ ஓய்ந்திரு.

அமர்ந்திருந்து அறி, தந்தை அறிவார்.

அவர்உன்னை அழைத்துச் செல்லும் வழி

தமதுபாக்கிய நாட்டினுக்கு, அங்கு

தகாததொன்று மில்லை. யாவும் நலமே.

அது இன்பநாடு. அமர்ந்த நீரோடையுடன்

அழகுமிகும் நாடு. ஆன்மாவங்கு அறியும்

அவர்தம் ஆண்டவரை மனநிறைவுடன்,

அவர்செய்த யாவுக்கும் போற்று அவரை.