July

யூலை 13

யூலை 13

…. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல்அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்….. (ரோ.4:17).

இவ்வார்த்தைகளின் பொருள்யாது? ஏன் அபிரகாம் இக்காரியத்தைச் செய்தார்? அவர் ஆண்டவரில் விசுவாசம் வைத்தார்.அந்த வயதில் ஆபிரகாம் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆவது நடக்கக் கூடாத காரியம். அதுசம்பவிக்கக் கூடியதல்ல. ஒரு குழந்தை வரும் என்ற அடையாளம் ஏதுமின்றியே ஆண்டவர் அபிரகாமைபல ஜாதிகளின் தந்தை என அழைத்தார். ஆண்டவர் அவரைத் தந்தை என்று அழைத்தால் தானும்தன்னை அவ்வாறு அழைத்துக்கொண்டார். அதுதான் விசுவாசம். ஆண்டவர் கூறியதை நம்பி அதைமெய்யென வற்புறுத்துவது வெறுமையாக தோன்றும் இடத்தில் விசுவாசம் கால் வைத்து, அடியில்பாறையைக் காண்கிறது.

உனக்கு என்ன இருக்கிறது என்றுஆண்டவர் கூறுகிறாரோ, அதுவே உனக்கு இருக்கிறதென்று மட்டும் நீ கூறு. அவர் நீ நம்புகிறஅனைத்தையும் உனக்குத் தந்தருளுவார். அது மட்டுமல்ல மெய்யான விசுவாசமாயிருக்கவேண்டும்.நீயும் உன்னிலுள்ளதனைத்தும், அந்த விசுவாசத்தோடே ஆண்டவரிடம் போகவேண்டும்.

நம்பிக்கையில் வாழவிருப்பம் கொண்டிரு. வேறு எவ்வகையிலும் வாழ எண்ணமோ, விருப்பமோ கொள்ளாதே. உன்னைநோக்கி வரும் எவ்வித வெளி ஒளியையும் கவனிக்காதே. எல்லா விண்மீன்களும் மங்கிப்போகட்டும். இருளும், ஆபத்துகளும் மட்டுமே இருக்கட்டும். ஆண்டவர் மட்டிலும் உன் ஆத்துமாவில்உள்ளான ஒளிப்பிரகாசத்தை வரவிடுவாராயின், ஆதுதான், விசுவாசம், உன்னில் ஏற்றிய ஒளி.அதுவே உனக்குப் போதும். வேறு எந்த ஒளியும் உனக்குத் தேவை இல்லை.

அவநம்பிக்கை வழக்கமாகஅமரும் இடத்தையும், பாதுகாப்பாக உனக்குத் தேனர்றுகிற உன் கூட்டையும் விட்டுவிசுவாசமென்னும் செட்டைகளைக்கொண்டு பறந்து செல்லும் நேரம் வந்துவிட்டடது. அவ்வாறானநேரம் ஒரு பறவைக்கு வருமாயின் அது பறந்து செல்லத்தானே வேண்டும். குருவிக் குஞ்சுக்குக்கூடதான் விழுந்து விடுவதுபோல் தோன்றலாம். ஆனால் அது விழுவதில்லை. அதன் செட்டைகள் அதைத்தாங்குகின்றன. அம் முயற்சியில் அது தோல்வியுற்றால் அதன் பெற்றோராகிய பறவைகள் அதன்கீழ் பறந்து வந்து தங்களது செட்டைகளால் அவற்றைத் தாங்கிக்கொள்கின்றன. அவ்வாறேஆண்டவர் உன்னைத் தாங்கிக்கொள்ளுவார். அவரை மட்டும் நீ நம்பு. நீ தாங்கிக்கொள்ளப்படுவாய். நான் ஒரு பாதுகாப்பும் இல்லாமலா குதிக்கவேண்டும்? என்று நீ கேட்கலாம்.அதுதான் அப்பறவைக்குஞ்சும் செய்ய வேண்டியிருந்ததுபோலத் தோன்றியது. காற்று உண்டு ஆனால்அதைக் காணமுடியாது. ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் அங்குள்ளன, என்று உனக்குத் தெரியும்.அவைகள் ஊறுதியற்றவைகளல்லவே. எனது ஏழை ஆத்துமாவுக்கு அவ்வாறான வலிமை கிடைக்குமோ என்றுஎனக்குத் தோன்றவில்லையே. ஆண்டவர் அது கிடைக்குமென்று கூறியிருக்கிறாரா? போராட்டத்தில்பயந்து நடுங்கும் என் ஆத்துமா வெற்றி பெறும் என்று தோன்றவில்லையே? அது வெற்றி பெறும்என்றவர் கூறியுள்ளாரா? என்று பயத்தால் கொள்ளியான இதயத்திற்கு அமைதி கிடைக்கும்போல்எனக்குத் தோன்றவில்லையே? ஆண்டவர் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாரா? அவர் கூறியிருந்தால்அவரைப் பொய்யரென்று கூறாதே. அவர் கூறியிருக்கிறாரா? அவர் செய்யமாட்டாரா? நிச்சயமானஒரு வாக்குத்தத்தம் கிடைத்ததெனில், உடனே அதை நம்பு. முழுவதுமாக அதை நம்பு. அவரிடமிருந்துஇவ்வார்த்தை உனக்குக் கிடைத்திருக்கிறது. அவர் எப்பொழுதும் முழு நிச்சயத்துடன் தான்பேசுவார். நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ முழு நிச்சயத்துடன் அவரை நம்பு.