July

யூலை 1

யூலை 1
…. கர்த்தராலேஅவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்….. (லூக்.1:45).
…. தகுந்த காலத்திலேநிறைவேறப்போகிற என் வார்த்தைகளை…. (லூக்.1:20).
அன்பின் இதயம் காத்திருந்த
காரியங்கள் நிறைவேறும்.
என்றும்தவறா இறைவனவர்
வாக்களித்தவை அவளுக்கு.
அவள்என்றும் ஐயுறாள்
அவர்தம் மெய்யாம் வார்த்தையை.
அவர்பேசினார், அது நடக்கும்.
ஆற்றல்நிறை ஆண்டவர் அவர்.

பாரங்கொண்டநெஞ்சே, அமரு.
காரியங்கள் நிறைவேறும்.
ஆரவாரமின்றி, அவர் செட்டை கீழ்
காத்திருக்குது, ஜெபத்தின் பதில்.
உன்கவலை அவர் மேல் நீ
இதயம்மகிழவைத்திரு.
உன்காரியங்களனைத்தும்
குறித்த காலம் நிறைவேறும்.

களைத்த நெஞ்சே, அவர் கூறினார்.
காரியங்கள் நிறைவேறிடும்.
இளைப்புத்தரும்உன் நாள் முடிந்தது
இனியமாலை வந்திடும்.
விசுவாசம், இரவில் வரும் ஐயம்
தனைமிஞ்சிடும் அறிந்திடு.
விசுவாசவானிலே தவறாது
தோன்றிடும் விண்மீன்களே.

நம்பிடும் நெஞ்சே, அவர் கூறினார்
காரியங்கள் நிறைவேறும்.
நம்பிக்கை, விசுவாசம் வளர்ந்து
விண்ணை நோக்கி எழும்பட்டும்.
இன்பக்காலையின் கதவுகள்
விரிவாக திறந்திருக்கும்.
இரவுமறைந்த இன்பங்கள்
இன்றுதெரியத் திறந்திடும்.
வழிகள்அடைக்கப்பட்டிருக்கும்பொழுது, வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலை நாம் உறுதியாகநம்பவேண்டும். ஏனென்றால் தேவனுடய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம்என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிதே (2.கொரி.1:20) என்று மாத்யூ கென்றிஎழுதுகிறார்.