ஐனவரி 31
அவர் சமாதானத்தை அருளுகிறார் (யோபு 34:30). புயலினூடே அமைதல். அவரோடு இன்னும் ஏரியில் படகைச் செலுத்துகிறோம். கரையைவிட்டு வெகுதூரம் சென்று ஜலத்தின் மத்தியையடையும்போது, நடுநிசியில் சடுதியில் புயல் உண்டாகிறது. பூலோகமும், பாதாளமும் நமக்கு எதிர்த்து நிற்பதுபோல் தோன்றுகிறது. அலைகள் நம்மை ஆழத்திவிடும் என்று பயப்படுகிறோம். அப்போது அவர் தமது நித்திரையைவிட்டு எழுப்பிக் காற்றையும், கடலையும் அதட்டுகிறார். அவர் கரம் கொந்தளிப்பை அமரச்செய்கிறது. அமர்ந்திரு என்ற இயேசுவின் சப்தம் காற்றின் இரைச்சலுக்கு குமுறும் அலைகளுக்குமேல் கேட்கிறது. உன் காதுக்கு…