April

ஏப்ரல் 20

ஏப்ரல் 20 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக.4:6). நான் மலையின்மேல் செல்லும் செங்குத்தான ஒரு பாதை வழியே சென்று கொண்டிருந்தேன். மலை அடிவாரத்தில் துவிச்சக்கர வண்டியில் செல்லும் ஒரு சிறுவனைக் கண்டேன். எதிர்காற்று வீசியதால் பையன் வண்டியை ஓட்ட வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னாலானவரை முயன்று கொண்டிருந்தான். அவ்வழியே மேலே செல்லும் ஒரு பேருந்து வண்டி வந்தது. அந்த வண்டி அதிக வேகமாகச் செல்லாததால்…

April

ஏப்ரல் 19

ஏப்ரல் 19 நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13). ஒரு விசுவாசி அதிக நெருக்கடியான நிலைமையிலும் பெரும் கஷ்டத்திலிருக்கும்போதும், அவனுக்கு இந்த வார்த்தைகள் தேவனுடைய கட்டளையாயிருக்கின்றன. அவன் பின்வாங்க முடியாது. அவன் முன்னேறிச் செல்லவும் முடியாது. வலது இடது புறங்களிலும் அடைபட்டிருக்கிறான். அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும்? நீ நின்றுகொண்டிரு என்பதே எஜமானின் வார்த்தை. அப்படிப்பட்ட நேரங்களில் அவன் தன் எஜமானுடைய வார்த்தைக்கு மட்டும் செவிகொடுத்தால் அது அவனுக்கு நன்மை…

April

ஏப்ரல் 18

ஏப்ரல் 18 அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5). நான் ஜெபித்தபின், ஜெபித்த காரியம் கைகூட என்னால் ஆனதையெல்லாம் என் கடமை என்று ஒருகாலத்தில் எண்ணினேன். அவர் எனக்கு அதைவிட ஒரு சிறந்த வழியைக் காட்டினார். என் சுயப்பிரயாசம் அவருடைய வேலைக்கு எப்போதும் தடங்கலாயிருக்கிறதென்பதைக் காட்டினார். நான் ஜெபித்து எல்லாவற்றிற்கும் முழுவதுமாய் அவரையே நம்பும்போது துதியோடு காத்திருந்து அவர் செய் என்று சொல்வதை மட்டுமே செய்யவேண்டுமென அவர் விரும்புகிறார். ஒன்றும் செய்யாமல் அவரையே நம்பிச் சும்மா உட்கார்ந்திருத்தல் ஆபத்துக்கிடம்…

April

ஏப்ரல் 17

ஏப்ரல் 17 கர்த்தருடைய கரம் இதைச் செய்த(து) (யோபு 12:9). அநேக ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சுரங்கத்தில், உலக சரித்திரத்தில் இதுவரை காணப்படாத மாட்சிமையான வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது இங்கிலாந்து மன்னருக்கு அவருடைய மணிமுடியில் ஒளிவிடும்படி வெகுமதியாக அளிக்கப்பட்டது. வெட்டப்படும்படி      ஆம்ஸ்டர்டாமுக்கு மன்னர் அதை அனுப்பினார். அது ஒரு கைதேர்ந்த வைரம் இழைப்போன் கையில் கொடுக்கப்பட்டது. அவன் அதை என்ன செய்தானென்று நினைக்கிறீர்கள்? அவன் அந்த விலைமதிப்பிலா கல்லை எடுத்து அதில் ஒரு வடு உண்டாக்கினான்.…

April

ஏப்ரல் 16

ஏப்ரல் 16 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து புறப்பட்டுப்போனான் (எபி.11:8). அவன் எங்கு செல்கிறான் என்பது அவனுக்கே தெரியாது தான் தேவனோடு சென்றான் என்ற அறிவு ஒன்றே அவனுக்குப் போதுமானதாயிருந்தது. வாக்குத்தத்தங்களைச் சார்ந்திருப்பதைவிட அதிகமாய் வாக்குத்தத்தம் தந்தவரைச் சார்ந்திருந்தான். அவன் கஷ்டங்களைப் பாராமல், தன் வழியைத் தனக்குக் காண்பித்த இராஜாவும், நித்தியரும், அழிவில்லாதவரும் காணக்கூடாதவரும் ஆகிய சர்வ ஞானமுள்ள தேவன் அதைச் சரியென்று காட்டக்கூடும் என்பதையே பார்த்தான். இது எவ்வளவு…

April

ஏப்ரல் 15

ஏப்ரல் 15 உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன் (சங்.119:42). தேவன் தாம் சொன்னதை செய்வார் என்று எவ்வளவு உறுதியாய் நம்புகிறோமோ, அவ்வளவில் நமது விசுவாசம் பலனுள்ளதாக அல்லது பலனற்றதாக இருக்கிறது. நமது உணர்ச்சிகள், நம் மனதில் பட்ட காரியங்கள் வெளிப்பார்வைக்குத் தோன்றுபவை. இவற்றிற்கும் விசுவாசத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. விசுவாசத்திற்கு இவை ஒன்றும் தேவையில்லை. இவைகளை விசுவாசத்தோடு இணைத்துவிட விரும்பினால் நாம் தேவனுடைய வார்த்தைகளை நம்பிச் சார்ந்திருப்பவர்களல்ல. விசுவாசம் தேவனுடைய வார்த்தை ஒன்றில் மாத்திரமே சார்ந்திருக்கிறது. அவருடைய வார்த்தைகளின்படி செய்வார்…

April

ஏப்ரல் 14

ஏப்ரல் 14 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்களின்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1.தெச.4:16-17) அதிகாலையில் இருட்டாயிருக்கையில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். திறந்து இருந்த அவர் கல்லறையை, சூரியனல்ல, விடிவெள்ளியே கண்டது. இருள் இன்னும் நீங்கவில்லை, எருசலேம் நகர்வாசிகள் எழவில்லை. அவர் எழுந்த…

April

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது. அவர் நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார் (எசேக்.3:22). கிறிஸ்துவுக்கென உபயோகிக்கப்பட்டவர்களில் யாராகிலும் விசேஷித்த தரித்திருத்தலின் காலம் இல்லாமலும், தங்களது திட்டங்கள் யாவும் முற்றிலும் மாற்றப்படாமலும் இருந்ததுண்டென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இரட்சிக்கப்பட்டேன் என்ற நற்செய்தியால் பரிசுத்தப் பவுலின் உள்ளம் பொங்கிக் கொண்டிருந்த காலத்தில், அரேபிய வனாந்தரங்களுக்கு அவர் அனுப்பப்பட்ட அந்த நாளிலிருந்து இந்நாள்வரைக்கும் அது அவ்வாறே நடந்து வந்திருக்கிறது. கிறிஸ்துவை நம்புவதைக் குறித்து…

April

ஏப்ரல் 12

ஏப்ரல் 12 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் (லூக்.4:1). இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார் என்றாலும், அவர் சோதிக்கப்பட்டார். ஒரு மனிதன் தேவனன்டை நெருங்கி இருக்கையில்தான் சோதனை தன் முழு பலத்துடன் அவனைத் தாக்குகிறது. சாத்தான் வெகு பெரிய செயல்களைச் சாதிக்கும் எண்ணம் கொண்டவன் என்று கூறியுள்ளார் ஒருவர். அவன் இயேசுவின் சீடர்களில் ஒருவனைக் கிறிஸ்துவை நான் அறியேன் என்று சொல்லக்கூடச் செய்தான். மார்ட்டின்…

April

ஏப்ரல் 11

ஏப்ரல் 11 நான் உங்களுக்கு இருளிலே சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்.  (மத்.10:27). நம்முடைய தேவன் அடிக்கடி நம்மிடம் பேசுவதற்காக நம்மை இருளில் அழைத்துச் செல்கிறார். நமக்கு அருமையானவர்களை இழந்த மரண இருளுக்குள்ளும், துக்கம் ஏமாற்றம் என்னும் இருளுக்குள்ளும் அழைத்துச் செல்கிறார். பின்பு அவர் நமக்கு உன்னதமானதும், ஆச்சரியமானதும், அழிவில்லாததும், முடிவில்லாததுமான தமது இரகசியத்தைச் சொல்கிறார். உலக ஒளியால் கூசிப்போன நம் கண்களால், பரலோக நட்சத்திரக் கூட்டங்களைக் காணச் செய்கிறார். உலகத்தின் குழப்பங்கள், சப்தங்களுக்கிடையில் நமது செவிகளைத்…