யூலை 11
யூலை 11 தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளைக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1.இராஜா.17:7). கலங்காத மனதுடனும், உறுதியானஉள்ளத்துடனும் ஒவ்வொரு நாளும் எலியா வற்றிப்போய்க் கொண்டிருந்த அந்த ஆற்றைக்கவனித்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி அவருடைய விசுவாசம் தளர்ந்துவிடும்போலிருந்தது.ஆனாலும், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அவருக்கும், அவருடைய ஆண்டவருக்குமிடையே உள்ளஉறவில் குறுக்கிட அவர் இடம்கொடுக்கவில்லை. புகை நிறைந்த வானத்தினூடே சூரியனை நாம்மங்கலாகக் காணுவதுபோல், சந்தர்ப்பங்களுக்கும் தனக்குமிடையே ஆண்டவரை வைத்து அவிசுவாசம்எலியாவுக்குக் காட்டியது. ஆனால் விசுவாசமோ, சந்தர்ப்பங்களினூடாகவே ஆண்டவரைக் காணமுற்பட்டது. குறைந்துகொண்டே போன அந்த ஆற்றின்…