அகபு (Agabus)

பவுலுடைய நாட்களில் எருசலேமிலிருந்த ஒரு தீர்க்கதரிசி. உலகமெங்கும்
பஞ்சமுண்டாகுமென்று இவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் (அப்.11:28). இது
கிலவுதியுராயன் காலத்தில் நிறைவேறிற்று.
இவன் செசரியா, பட்டணத்தில் பவுலைச் சந்தித்து எருசலேமில் யூதர் அவனைக் கட்டி
புறஜாதியர் கையில் ஒப்புக்கொடுப்பார்களென்று, பரிசுத்த ஆவியானவர்சொல்லுகிறார்
என்றான் (அப்.21:10-11).