May

மே 15

மே 15

…… கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்;டும்படிக்கு அவர்கள் முன் சென்றது (எண்.10:33).

தன் பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வைக் குறித்து தேவன் அக்கறை கொண்டுள்ளார். அமைதியுடனும், கரிசனையோடும், மகிழ்ச்சியோடும் அவர் நமக்கெனத் தி;ட்டம் தீட்டுகிறார்.

நமக்காக இளைப்பாறும் இடங்களைத் தேடிச் செல்பவர் அவர். அக்கினி ஸ்தம்பமும், மேகஸ்தம்பமும் எழும்பும்போது தாங்கள் எங்கு செல்கின்றோம் என்பதை இஸ்ரவேலர் அறியாதிருந்தனர். இதற்கு முன்பாக அந்த வழியாக ஒருபோதும் அவர்கள் சென்றதில்லை. அவர்கள் தங்கள் வழிகாட்டியை உண்மையுடன் பின்பற்றிச் செல்லும்போது தேவன் அவர்களுக்கென தெரிந்தெடுத்துள்ள இடத்தினை ஏற்ற வேளையில் அடைய முடிந்தது.

அவர் நம்மை எங்கே நடத்திச் செல்கிறார் என்ற கேள்வியைத்தான் நாம் முக்கியமாகக் கேட்கிறோம். இது நமக்குப் புரியாத புதிரல்ல. நம்முடைய வழிகாட்டியை நாம் நன்கு அறிவோமாயின், அவர் நம்மை மிகுந்த பாதுகாப்புடன் வழிநடத்திச் செல்வார் என்று நம்பி பின்செல்வோம். நமது நம்பிக்கையை நாம் செல்லும் வழியின்மீது வைக்காமல் நமது தளபதி இயேசு இடத்தை அவர் காட்டுவார். தங்குவதற்கான வீட்டைக் காட்டுவார். இம்மைக்கான தேவைகளையும், சரீரத் தேவைகளையும் நிறைவேற்றுவார். அவர் திட்டமிடுவாராயின் நமக்கென வழித்துணையினையும் வாய்க்கப்பண்ணுவார். நமக்கு நம்பிக்கையற்றிருப்பதாகத் தோன்றும்போது, அவர் ஆறுதலைக் கொடுத்து ஊக்குவிக்கிறார். நம்மைச் சுற்றிலும் எல்லாக் கதவுகளும் பூட்டியிருக்கக் காணும் வேளையில் எற்ற வாசலைத் திறந்து கொடுப்பவர் அவா!