May

மே 7

மே 7

…. காணதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோ.20:29).

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர்யுத்த நாளிலே முதுகு காட்டினார்கள் (சங்.78:9). அவர்களிடம் எல்லா ஆயுதங்களும் இருந்தன.ஆயினும் கீழ்ப்படியத்தக்கதான இருதயம் இல்லாதிருந்து. நாம் விசுவாசத்தில் நடப்போமாயின்தோல்வியும், குழப்பமும் ஏற்பட்டாலும் பேதுருவைப்போன்று நாமும், ஆண்டவரே யாரிடத்தில்போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில், உண்டே, நீர் ஜீவனுள்ள தேவனுடையகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் (யோ.6:68-69) எனக்கூறமுடியும். நமக்கு வெளியே எதிர்ப்புக்கள் பெருகி, பின்வாங்கிச் செல்லும்படிநெருக்குகையில்தான் நாம் வல்லமையள்ள தேவனுடைய குமாரனைக் கண்டுகொள்ளும் பாக்கியத்தைப்பெறுகிறோம்.

பின்வாங்கிப்போன சீடர்களின் பெயர்கள்வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவரைத் தொடர்ந்து பின்சென்ற பேதுரு, யாக்கோபு,யோவான், அந்திரேயா, பர்தலெமேயு போன்றோர் இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பின்பும்நம் நினைவில் நிலைத்து வருகின்றனரே! பின்வாங்கிப் போவதற்குக் கிட்டும் பலனையும்,சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றுவோருக்குரிய ஆசீர்வாதங்களையும் சற்றுஎண்ணிப்பார்!

விசுவாசத்தை ஓர் எல்லைக்குள் நாம்நிறுத்திவிடுகிறோம். நாம் எதிர்பார்ப்பதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக நடக்கும் என்றுநம்பவேண்டும். மார்த்தாளைப் பார்த்து இயேசு, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக்காண்பாய் என்று உனக்குச் சொல்லவில்லையா? எனக் கேட்டார் (யோ.11:40). இயேசுவையும்அவர் கூறிய வார்த்தைகளையும் தவிர அவளுக்கு நம்பிக்கையூட்டுவதற்கென எவ்வித ஆதாரமும் இல்லாதிருந்தது.உனக்கு இவைகள் ஆதாரமாயுள்ளனவா?

இருளில் நடந்து செல்லும்போது தேவன்வெளிச்சத்தில் உன்னோடு சொன்னவற்றை நினைத்துக்கொண்டு சந்தேகப்படாமல் முன்னெறிச்செல். இதுதான் விசுவாசித்து நடப்பது என்பது.