March

மார்ச் 14

மார்ச் 14

விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16)

வளர்ந்துகொண்டு இருக்கும் இளம் கிறிஸ்தவனாகிய நான் ஒரு முக்கியமான தீர்மானம் செய்யவேண்டியிருந்தது. என்மீது அக்கறைகொண்ட என் நணர்பர்கள் ஒரு யோசனை கூறினார்கள். நானும் அதன்படி நடக்க ஆரம்பித்தேன். இவர்கள் எல்லாருக்கும் பின்பு ஒரு முதிய நண்பரைக் கண்டன். அவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் எனக்கு எசாயா 28:16ஐ குறித்துக் கொடுத்தார். அவர், தேவன் நமக்கென ஒரு வேலையைக் கொடுக்கும்போது அதை முடிக்கும் வரையில் வேறு எந்த விதமான மாற்று வழியையும் கையாளுவதில்லை என்று நான் உறுதிகொண்டேன். கடந்த செப்டெம்பர் மாதம் எனக்கும், உனக்குமாக இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் 9ம் தேதிவரை செய்வோம். அடுத்து ஜுலை அல்லது அடுத்த வருடம் நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் சிந்திக்கவேண்டும். கொடுக்கப்பட்ட இந்த வேலையை மே 9ம் தேதிக்குள் முடித்தால் தேவன் Nவுறு வேலையைக் கொடுத்து வாழ்க்கைப் பாதையில் வேறு வழியாக நடத்துவார் என்பது நிச்சயம் என்றார்.

அவர் ஆலோசனைக்குச் செவிகொடுத்தேன். நான் நம்பிக்கொண்டிருந்த, எதிர்பார்த்த, என்னைக் காட்டிலும் அனுபவத்தில் முதிர்ந்த ஒரு சகோதரனைத் தேவன் மே மாதம் 9ம் தேதியன்றே காலையில் கொண்டுவந்தார். அவர் என் வாழ்நாள் முழுவதற்கும் உதவி செய்தார். அவர் அந்த நாளிலே எனக்குக் கொடுத்த சரியான, தெளிவான ஆலோசனையால் என் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது.

உண்மையோடு உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யும்போது வீழ்ச்சியடையமாட்டாய். அவசரப்படாதே, ஆத்திரப்படாதே, கவலபை;படாதே. உன் வழிகளெல்லாம் தேவன் உன்னோடு கூட வருவார். நாற்சந்தியில் நின்று எவ்வழியில் செல்வதென்று திகைத்து நிற்கும்போது, நீ செல்லவேண்டிய வழியைத் தெளிவாகத் தெரிவிக்கும் தேவன் அவர் என்பதை மறவாதே!