March

மார்ச் 1

மார்ச் 1

எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். (எரேமி.42:6)

எரேமியா 42ம் அதிகாரத்தில் தேவன் நம்மைஎவ்விதம் வழி நடத்துகிறார் என்பதைக் காண்கிறோம். நாம் எதையும் தீர்மானிப்பதற்குமுன்பு மூன்று காரியங்களைக் கவனிக்கவேண்டும்.

முதலாவது நம்மைத் தேவனுடைய வழிநடத்துதலுக்குவிரும்பி ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவனுடைய வெளிப்படுத்ததலுக்கென உண்மையோடும்,விசுவாசத்தோடும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது அது நன்மையானாலும்சரி… எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் (வச.6)என்று அவருடைய வெளிப்படுத்துதலுக்கென முற்றிலுமாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.

இரண்டாவதாக, தேவனுடைய பதில் கிடைக்கும்வரைகாத்திருக்கவேண்டும். அசட்டையாகவோ, துன்பத்தின் காரணமாகவோ விட்டுவிடக்கூடாது. தேவன்எரேமியாவின் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கப் பத்து நாட்கள் ஆயிற்று. (வச.7).ஜெபித்தபின்பு அவருடைய பதிலுக்காக, அவருடைய வேளைக்கென நாம் பொறுமையோடுகாத்திருக்கிறோமா? எந்த ஒரு செயலுக்கும் உடனே முடிவைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும்அவசரப்படுகிறோம், ஆசைப்படுகிறாம். ஆனால் தேவனோ, எனக்குக் காத்திருக்கிறவர்கள்வெட்கப்படுவதில்லை (ஏசா.49:23) எனக் கூறுகிறார்.

மூன்றாவதாக, அவர் வெளிப்படுத்திய கட்டளைகளுக்குக்கீழ்ப்படிய வேண்டும். அவரது நாம மகிமைக்கென நமது சொந்த தீர்மானங்களை விட்டுவிடவேண்டும்.நமது தீர்மானத்தின்படி நாம் நடப்போமாகில் பின்னர் வேதனைப்படுவோம்.

குழப்பமான வேளைகளில் நீ பரலோகத்தின்ஞானத்திற்கென கேள். அவர் காட்டும் நேர்வழிக்கென காத்திரு. தயக்கமின்றிகீழ்ப்படியவேண்டும். அப்பொழுது அவர் உன்னைத் தமது மகிமையுள்ள தீர்மானத்திற்குள்வழிநடத்துவார்.