February

பெப்ரவரி 19

பெப்ரவரி 19

…… உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1.கொரி.1:9)

கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. அவரது நியாயத்தீர்ப்புக்கு மேலாக மறு பரிசீலணைக்கென மேலிடத்திற்கு மனு செய்யமுடியாது. விசுவாசிகள் யாவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும் (1.கொரி.5:10). அவரிடம் அப்பொழுது வாழ்வின் உக்கிராணக்கணக்கை ஒப்புவிக்க வேண்டும். அங்கு அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும் (1.கொரி.3:13). அவனுடைய வேலைக்கேற்ப நீதியுள்ள அந்த நீதிபதி கூலி அல்லர் தண்டனை கொடுப்பார் (1.கொரி.3:14-15).

அவரது சித்தத்தினை உணர்ந்து, அதன்படி செய்த உங்களை மக்கள் வெறுத்தாலும், அவர் ஏற்றுக் கொள்வதை அந்த நாளில் நீங்கள் காணலாம். யார் எதைக் கூறினாலும் கவலைப்படாதே. அவருக்கே கீழ்ப்படி. மக்கள் முன்பு பாராட்டுப் பெறுவதையும், வெற்றியடைவதையும், தோல்வியடைவதையும்கூட மனதில் கொள்ளாதே. அந்த நீதிபதியிடம் மட்டுமே நாம் கணக்கொப்புவிக்கவேண்டும்.

தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும்போது மனிதர் கருதும் பொல்லாத கொலைபாதகங்களும் மன்னிக்கப்படும். மற்றவர்கள் நம்முடைய நல்லெண்ணங்களைக் குறைகூறலாம். நம்முடை திட்டங்களை எதிர்த்து நிற்கலாம். ஆனால் நம்முடைய இருதயத்தையும், உள்ளான வாஞ்சைகளையும் அறிகிற தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு பரியந்தம் அவர் உங்களை ஸ்திரப் படுத்தவார் (1.கொரி.1:8). ஏனெனில் தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.