February

பெப்ரவரி 3

பெப்ரவரி 3

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றைம் உங்களுக்கு போதித்து… நினைப்பூட்டுவார் (யோ.14:26).

நமதாண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்நாமும் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். நாம் அவரை நன்குஅறிந்திருப்போம். நாம் வாழும் இக்காலத்தில் மனித வடிவில் அவர் இருப்பாராகில் அவரிடம்சென்று புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே என ஏங்குகிறோம்.ஆயினும் ஆலோசனை கூறுவதற்கென இவ்வுலகில் இங்கேயே இருக்கிறார். அவர்தான் விசுவாசத்தினால்நம் இருதயங்களில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர். அவரைப் பற்றி ஆண்டவர் இயேசு, நான்பிதாவே வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச்சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்….. அவர்உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்(யோ.14:16-17).

அன்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்குஎவ்விதமாக இருந்தாரோ அதே விதமாக இன்று நம்முடன் பரிசுத்த ஆவியானவர் இருந்து வருகிறார்.அவர் நமக்கு எப்பொழுதும் உதவுகிறவர். நமக்கக் கிருபையும், பெலனும் அளித்து நம்மோடு இருப்பவர்.அவர் தேவனுடைய சித்தத்தின்படி நாம் ஜெபிப்பதற்கு உதவி செய்வார்.

அவர் தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும், இருக்கிறார்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் ஆகியோரை ஏவிவேதப்புத்தகத்தை எக்காலத்திற்கும் ஏற்ற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாய் நமக்கெனஎழுதும்படி செய்தார். சத்திய ஆவியாகிய அவர் தேவனுடைய மக்களுக்குப் போதித்து, சகலசத்தியத்திற்குள்ளும் நடத்துகிறார். அவரில் சார்ந்திருந்து, அவருடைய உதவியுடன்வேதபுத்தகத்தை வசனங்களுடன் ஒத்திட்டுப் படி, அப்பொழுது அவர் எல்லாவற்றையும் போதித்துவழி நடத்துவார்.