ஐனவரி 21
தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1.கொரி.10:13). சோதனைகளும், குழப்பங்களும் வரும்போது இவை யாவும்நமக்குத்தான் வருகின்றன. வேறு யாருக்கும் வருவதில்லை என்றும் நாம் கருதிய வேளைகள் பலஉண்டு. இது சரியல்ல. தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம்அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்முடைய விசுவாசத்தையும், பொறுமையையும்சோதித்து அறிவதற்கென்றும் சோதனைகள் நமக்கு வருகின்றன. குழப்பமும், இருமனமுள்ள நிலைமையும் யாவருக்கும்வருவது இயல்பு. இதில் விதிவிலக்கு இல்லை. சிலர் மற்றவர்களை விட மிகவும் மனம் தளர்ந்துபோய்விடுகின்றனர். குழப்பமும், வேதனையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்போது, அவை நமக்குஅர்த்தமற்றவையாகவும், முடிவேயில்லாதவையாகவும் தோன்றும். நமக்கு இவைகள்…