ஐனவரி 31
நீ பயப்படாதே, இதோ, நான் உன்னைத் தூரத்திலும்… இரட்சிப்பேன் (எரேமி.30:10). தேவன் நம்மைக் கடிந்துரைப்பது அவர் நமக்குக் கூறும் கடைசி எச்சரிப்பு அல்ல. தொடர்ந்து விக்கிரகாராதனையிலும், பாவத்திலும் வாழ்ந்து வந்த யூதர் இராஜ்யம் கல்தேயரரிடம் சிறைப்பட்டுப் போயிற்று. தேவன் பரிசுத்தராக இருப்பதினால் பாவத்திற்குத் தண்டனையளிக்கிறார். நியாயத்தீர்ப்பினால்தான் பாவி பக்குவப்படுத்தப்படுகிறான். சங்கீதக்காரன் தன் வேதனையில் கர்த்தாவே நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு எனக் கதறுகிறான் (சங்.130:3-4). தவறுகளுக்கு மன்னிப்பு…