ஏப்ரல் 10
ஏப்ரல் 10 அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள் (லூக்.14:14). தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று இயேசு கூறியுள்ளார். அது உண்மை. ஏனெனில் காரணமின்றி ஏழையானோர் பலர் உண்டு. தகப்பன் வேலையின்றி சோம்பேறியாக இருப்பதினால் சிறு பிள்ளைகள் நிறைந்த குடும்பம் ஏழ்மையில் வேதனைப்படுவது இயல்பு. குடிகாரார்களாக இருப்பதினாலும், குடும்பத்தைச் சரியாக வருவாய்க்குள் நிர்வாகம் செய்ய இயலாததாலும், ஏழையானோர் பலர். அதற்காக மற்றவர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவது நல்லதல்ல. மாறாக அவர்களை தங்கள் மனச்சாட்சியினால்…