ஏப்ரல் 20
ஏப்ரல் 20 கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி.39:2). யோசேப்பிற்கு யாவரும் எதிர்ப்பாக இருந்தனர். எல்லாச் சூழ்நிலைகளும் பாதகமாகவே தோன்றிற்று. அவனது அண்ணன்மார் அவனைப் பகைத்தனர். கொன்றுபொட விரும்பினர். கடைசியில் அவனை உயிருடன் செத்தவனைப் போலாக்கி, அடிமையாக எகிப்தியருக்கு விற்றுப்போட்டனர். அங்கு போத்திபாரின் அரண்மனையில் மோசமாக நடத்தப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ஒரு புதிய நாட்டில் அவன் அந்நியனாக, அடிமையாக கைதியாக நண்பர்களற்றவனாக இருந்தான். ஆனால் அண்டவர் அவனோடு இருந்தார். கைவிடாத ஆண்டவரின் பிரசன்னம் யோசேப்போடிருந்ததை எவராலும், எந்தச் சூழ்நிலையிலும்…