ஆதி.22:14
உங்கள் அணைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வருடமுழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாரக! மோரியா மலையின் பர்வதமொன்றில் ஆபிரகாம் நின்று கர்த்தரை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து ‘யேகோவாயீரே” என்று பெயரிட்டான். இதற்கு கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று அர்த்தமாகும். ஈசாக்குக்கு பதிலாக பலியிடப்பட்டது தேவனால் கொடுக்கப்பட்ட ஆடு என்பதை ஆபிரகாம் தெரிந்துகொண்டான். நமக்கு ஆத்தும இரட்சிப்பு உண்டாக தேவன் நமக்காக இயேசு என்னும் ஆட்டுக்குட்டியை தந்தார். மேலும் நமது உலக தேவைகளையும் சந்தித்து வழிநடத்துகிறார். நமது தேவை என்ன என்பதை அவர் பார்த்து ஏற்றவேளையில் அதை சந்திக்கிறார். இதை உணர்ந்த ஆகார் தேவனுக்கு கொடுத்த பெயர் நீர் என்னை காண்கிற தேவன். ஆண்டவர் நம்மை காண்கிறவராக இருக்கிறார். இவ்வருடமுழுவதும் நாம் அவருக்கு பிரியமானவர்களாக நடப்போமானால் நம்மை அவர் கண்டு தேவையை சந்திக்கிறார். அன்பானவர்களே யேகோவாயீரேயின் மேல் உங்கள் பாரத்தை வையுங்கள்! அவர் பொருப்பேற்று நடத்துவார். அவர் காருண்யமுள்ள கர்த்தர்!