தீத்து 3:1-5
கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார். அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கும் நாம் சமுதாயத்திற்குள் சென்று சேவை செய்ய வேண்டுமென்பது கடவுளுடைய சி;த்தம். பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன், அந்நியனாய் இருந்தேன், வஸ்திரமில்லாதிருந்தேன், காவலிலிருந்தேன் என்மேல் நோக்கமாயிருந்து அன்புடன் கவனித்தீர்கள் என்று இயேசு சொன்னதை நினைவு கூற வேண்டும். வீண் தர்க்கங்களையும், வேண்டாத கேள்விகளையும் எழுப்பி, வேதத்தின் உண்மைகளைப் புரட்டுகிறவர்கள் சபைகளில் உண்டு. நிலைத் தவறி தங்களில் தாங்களே பாவ ஜீவியத்தில் சென்று கொண்டு மற்றவர்களுக்கும் இடையூறு உண்டாக்குகிறவர்கள் சபைகளில் உண்டு. இவர்களுக்காக ஊழியர் ஊக்கமாக ஜெபித்து, அவர்களை இரண்டொருதரம் அழைத்து, தவறுதல்களை உணர்த்தி புத்தி சொல்ல வேண்டும். மூப்பர்மார்களைக் கொண்டும் புத்தி சொல்ல வேண்டும். அவர்களுக்கும் அவர்கள் செவிகொடாமற்போனால் அவர்களை விட்டுவிலக வேண்டும். (மத் 18:17) தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு (2 தீமோ 3:5)