ஒபதியா 1-21
ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார். ஏதோமின் முதற்குற்றம் என்ன? வ-3. ‘விழுதலுக்கு முன் அகந்தை என்ற பழமொழி எவ்வளவு உண்மை! ‘கர்த்தர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். வ. 5-9ல் அழிவின் ஆழம் கூறப்படுகிறது. என்ன பரிதாபம்! ஏதோமின் செல்வங்கள் முற்றிலுமாகக் கொள்ளையிடப்பட்டன. அவன் நம்பி உடன்படிக்கை செய்தவரே அவனை அழித்தாலும், அவன் உணரவில்லை! கைவிடாக் கர்த்தரைக் கைவிடுவோர் நிலையை எண்ணுவோம். வ. 10-14 ஏதோமின் கொடிய குற்றம் விவரிக்கப்படுகிறது. வ. 15,16ல் ஏதோம் தன் செய்கையின் பலனை அடைகிறான் ‘வினை விதைப்போன் வினை அறுப்பான். கர்த்தருடைய நாள் தீர்ப்பின் நாள் நீதி சரிகட்டும் நாள் யாக்கோபின் வாழ்வு (வ. 17-21): கர்த்தரைத் தம் தெய்வமாகக் கொண்டோர், தண்டனை பெற்றாலும், தயையும் பெறுவர். ய+தாவும் இஸ்ரவேலும் தங்கள் வாக்குத்தத்தத்தை மீண்டும் பெறுவர்;, தப்பி மீந்தோர் பரிசுத்தமடைவர் கடவுளின் பகைஞர் அழிக்கப்படுவர் இரட்சகர் தோன்றுவார் கடவுளுடைய அரசு, ஆட்சி நிலைநிறுத்தப்படும்.