முன்னுரைப்பு: சகரியா12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
(1) நான் = கர்த்தர் (பிதா)
(2) கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் (பரிசுத்த ஆவி)
(3) தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து (குமாரனாகிய இயேசுவை நோக்கிப் பார்த்து)
இவ்விதமாகப் பிதா, குமாரன், பரிசுத்த அவி மூவரும் ஒரே கடவுள் என்பதை இவ்வசனம் ஊர்ஜிதப்படுத்துகிறது.
கீழ்க்கண்ட வசனங்களும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரே கடவுள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.
யோவான் 14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
அப்போஸ்தலர் 1:4,8
அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
இவ் வசனங்களின்மூலம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் ஒன்றாகச் செயல்ப்படுகிறார்கள் என்பதை அறியலாம்.