மத்.12:22-37
கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார். சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? கடவுளின் இராஜ்யம் சாத்தானின் ஆட்சியை முறித்தது. அவன் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றாலும் கட்டப்பட்டுவிட்டான். இப்போரில் இங்குமில்லை அங்குமில்லை என்றிருக்க இயலாது. இயேசுவோடிராதவன் பிறரைக் கடவுளிடமிருந்து பிரிக்கிறான். வ. 31-வேண்டுமென்றே உண்மையை உதறித் தள்ளி, நன்மையைத் தீமை என்று கூறுவது, ஆவியானவர் மூலம் செயல்படும் கடவுளின் வல்லமையை நிராகரிப்பதால் மன்னிக்கப்படாத பாவம் ஆகும். கனி காட்டும்: கனி மரத்தைக் காட்டும், வாழ்வின் பண்பு அதன் விளைவால் காணப்படும். வ. 34-இருதயத்தில் நிரம்பியுள்ள எண்ணங்கள் சொற்களாக வெளிப்படுகின்றன. எனவே, நம் உள்நிலையை நம் பேச்சு வெளிப்படுத்தும். ஆகையால், நம் சொற்களால் நாம் நியாயந்தீர்க்கப்படுவது முறையே. என் பேச்சு என் உள்ளத்தில் வாழ்வது யாரெனக் காட்டுகிறதா?