சங்.69:1-36
புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது. தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி ஊற்றுகின்றான். நெருக்கங்கள் முடிவுறாது தொடர்ந்தாலும் தேவனின் உதவிக்கே காத்திருக்கின்றான். எதிரிகளின் எண்ணிக்கையாலும் பொறாமையாலும் அநீதியாலும் கொடூரத்தாலும் தனக்கு ஏற்பட்ட துன்ப நிலையினை தன் தேவனிடமே கூறுகின்றான். உறவினரால் உதாசினப்பட்டு நிந்திக்கப் பட்ட நிலையியும் தேவனுக்கே மகிமை செலுத்துவது கிறிஸ்துவின் அனுபவங்களை நினைவுறுத்துகின்றது, தன் பாவத்தை மறைப்பது அறிவீனம் என அறிந்த அவன் அதனையும் தேவனிடம் அறிக்கையிடுகிறான். மன்றாட்டு: தன் உபவாசமும் அழுகையும் குடிகாரரின் பாடலானாலும் சோர்வுறாது தன்னை விடுவிக்கும் படி தொடர்ந்து மன்றாடுகின்றார். தேவ கிருபைக்காகவும் சத்தியத்திற்காகவும் வேண்டுகின்றார். தன் எதிரிகளின் அழிவை நாடாது, அவர்களின் முடிவை முன்னுரைகின்றார். அர்பணிப்பு: துக்கத்தோடும் வேதனையோடும் மகிழ்ச்சியோடும் துதியோடும் முடிக்கின்றார். தன்னுடன் மற்றவர்களும் சேர்ந்து தேவனை துதிக்க அழைக்கின்றார்.