நீதி.18:1-24
தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், கோள்காரர் ஆகியவர்களிடையே வாழ நேரிடுகிற விசுவாசி, பிரிவிற்கும் பகைக்கும் இடம் தராது வாழ்ந்தாலும், சில சமயங்களிலே பிறராலே துன்பங்கள் நேரிடுவது உண்டு. துன்பம் நேரிடுகின்ற காலங்களில் எல்லாம் ஒரு விசுவாசி தேவனிடத்திலே அடைக்கலம் ஆகவேண்டும் என்று அவர் விரும்புகிறார் (18:10) நாவடக்கம்: தேவன் அளிக்கும் அடைக்கலம் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு விசுவாசியும் தன் நாவையும், கட்டுப் படுத்துதல் மிக அவசியம். நாவின் மூலமாய் நன்மையும் தீமையும் விளைகிறபடியினால், நன்மைக் கேதுவானவைகளையே பேசுதல் நமக்கும் நம் மூலமாய்ப் பிறருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய் அமையும். நாவடக்கத்தோடு நற்பண்புள்ள மனைவியும் நல்ல சிநேகிதருமே ஒரு குடும்பத்தின் நல்வாழ்விற்குக் காரணமாய் அமைவார்கள்.