யோசு.3:3-17
சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ஆரம்பிக்க வேண்டும். கடந்த கால பாவம் சுத்திகரிக்கப்பட்டது. இப்போது கர்த்தர் செல்லுகிறார்-எழும்பு. . . போ. . . செய். . . எடுத்துக்கொள் (1,2). தம்வாக்குறுதியை புதுப்பிக்கிறார்-பயப்படாதே(10. திட்டமான கட்டளைகள்: வச. 1,2 ல் ஆயி மக்களுக்கு யோசுவா செய்ய வேண்டியதைக் குறித்துத் திட்டமான கட்டளை கர்த்தர் கொடுக்கிறார். வச. 3-8 கடந்த கால தோல்வியை தனக்கு அனுகூலமாக மாற்றுகிறான் (6,7) நேரத்தை வீணாக்கவில்லை (3,10) கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவன் இத்தன்மைகளை உடையவனாயிருக்க வேண்டும். தேவனிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சகல யுத்தமக்களையும் யோசுவா ஈடுபடச் செய்கிறான் (30 தோல்விக்கு பின் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று தேவன் அறிந்து அவ்வாறு செய்கிறார். சாதாரண திட்டம்(10-17): யோசுவா தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து 2)சாதாரண முறையைக் கடைபிடிக்கிறான். இஸ்ரவேல் சேனையை தேவன் அரசாளுகிறார். ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவனின் திறமைகளும் பயன்படுத்தப்படுகிறது. நம் பணியில் பயன்படத்தக்கச் சிறந்த திறமைகளை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். தேவ நடத்தலில், ஞானமாக பயன்படுத்தினால் உலகத்தில் அவருடைய பணியைச் செய்து முடிக்க முடியும்.