தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டபடியால் அதில் அடங்கியுள்ள 66 புத்தகங்களும் ஒரே ஆளால் எழுதப்பட்டதுபோல ஒவ்வொன்றும் தொடர்புடையவைகளாகவும், ஒரே இலக்கை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
முதல் புத்தகமான ஆதியாகமத்தில் முதல் மனிதன் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்ததினால் ஜீவவிருட்சத்தின் கனியை ஏதேனில் இழந்துபோகிறான். கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலில் மீட்கப்பட்ட மனிதன் அதைப் புதிய எருசலேமில் திரும்பப் பெற்றுக் கொள்கிறான்.