ஏசா.28:1-29
1. பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று பண ஆசை. ஜாதி வெறி, பதவி வெறி, பொருளாசை, பொறாமை, தரித்திருக்கிறேனா என்று ஆராய்ந்து, அது என்னை விழத்தள்ளுமுன் ஆண்டவருடைய மன்னிப்பையும், அருளையும் பெற்றுக் கொள். 2. மகிமையின் கிரீடம்: பாவம் மன்னிக்கப்பட்டு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு புதுசிருஷ்டியாக மாறும் போது நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் அவரது கரத்தில் ராஜமுடியுமாயிருப்போம். (ஏசா 62:3) 3. கற்பனையும் பிரமாணமும்: தேவனுடைய கற்பனைகளையும் பிரமாணங்களையும் கைக் கொள்வது உனக்கு பெரிய பாரமாகத் தோன்றுகிறதா? அப்படியானால் பால் மறந்த குழந்தைக்கு ஒத்த இருதயத்தை தாரும் என்று கேள். சிறு பிள்ளையைப் போல் மாறுகிறவனுக்குத் தான் தேவனுடைய இராஜ்யம் கிட்டும். ஆவிக்குரிய வரங்களால் நிரப்புவார். 4. மூலைக்கல்: மூலைக்குத் தலைக்கல்லாகிய கிறிஸ்து என்னும் கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடும் போது உன் விசுவாசம் உறுதியாக இருக்கும். விசுவாசிக்கிறவன் பதற மாட்டான். அவரே நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பித்து உனக்கு போதிப்பார்.