முன்னுரைப்பு: சங்கீதம் 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
மத்தேயு 13:34-35
இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன். உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மேசியா உவமைகளின்மூலம் மறைபொருள்களை வெளிப்படுத்துவார் என்ற சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வந்த ஜனங்களிடத்தில் உவமைகளின்மூலம் சுவிசேஷத்தை அறிவித்ததினால் 1000 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது. 50 க்கும் மேற்பட்ட உவமைகள் இயேசு கிறிஸ்து கூறியதாக சுவிசேஷங்களில் காணலாம்.