மனிதன் தன்னை வெளிப்படுத்த உதவும் சாதனம் அவன் சரீரமே. அவ்வாறே தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட சாதனம் கிறிஸ்துவின் சரீரமே. ஒரு விசுவாசி இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டானேயாகில், சபையின் முக்கியத்துவத்தை ஒருபோதும் தரம் தாழ்தி; எண்ணவே மாட்டான். அது மட்டுமல்ல தன்னையே முற்றிலும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு ஒப்புக்கொடுத்தும் விடுவான்.
1.கொரி.11:3 – கிறிஸ்து தலை
எபேசி.1:23 – எல்லாவற்றிற்கும் மேலான தலை
எபேசி.4:15 – அவருக்குள் வளர்கிறோம்
எபேசி.5:23 – கிறிஸ்து சபைக்கு தலை
கொலோ.1:18 – அவரே சரீரத்திற்குத் தலையானவர்
எபேசி.4:4 – ஒரே சரீரம் ஒரே ஆவி
கொலோ.3:15 – ஒரே சரீரமாக அழைப்பு
ரோ.12:4-5 – கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம்