முன்னுரைப்பு: ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். …….
நிறைவேறுதல்: மத்தேயு 3:16-17
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
இயேசு கிறிஸ்து யோவானால் திருமுழுக்குப் பெற்று யோர்தான் நதியிலிருந்து கரையேறினவுடன் பரிசுத்தாவி புறாவைப்போல் அவர்மேல் இறங்கினதுமல்லாமல், வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற ஒரு சத்தமுண்டாகி, ஏசாயாவின் மூலமாய் முன்னுரைக்கப்பட்ட வேதவாக்கியம் 700 வருடங்களுக்குப் பின் இயேசுவில் நிறைவேறியது.