சங்.63:1-13
ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது. பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை. ஜனங்களோடே களிப்பும் துதியுமான சத்தத்துடன் தேவாலயம் சென்று வந்த தாவீது (சங் 42:4). எருசலேமிலிருந்து துரத்துண்ட பொழுது தேவ சமூகம் நாடி வாஞ்சிக்கின்றார். வனாந்திரத்தின் வறட்சியும், ஆகாரமின்மையும் தாவீதின் ஆத்மீக தாகத்தையும் பசியையும் தூண்டிவிடுகின்றது. பாலும் தேனும் ஓடிய கானாவிலும் வனாந்திரம் காணப்பட்டது போல் பரிசுத்தவான்களின் வாழ்விலும் வறட்சி காணப்படலாம். என்னுடைய தேவன்: தேவனை தமக்கே சொந்தமாய் ஆக்கிக் கொள்ளும் போதே இவ்வாறு கூற இயலும். அத்தகையோர் நேரமும், இடமும் சாதகமாக இல்லை எனினும் தேவ பிரசன்னம் தேடி மிகுந்த வேட்கைகொள்வர். தேவன் தனக்கு என்ன செய்தாhர் என்பதைவிட அவர் தேவனாக இருப்பதற்காகவே துதிக்கின்றது. நன்றியுள்ள உணர்வுமாத்திரமல்ல: தேவன் தனக்களித்த வாயையும் உதடுகளையும் கையையும் பயன்படுத்தி துதிக்கின்றனர். திருப்பதி அடைந்த ஆத்துமா தொடர்ந்து தேவனையே பற்றிக் கொள்கிறது எதிர்ப்புகள் நீங்கிவிட, தேவ மனிதன் கர்த்தருக்குள் மகிழ்ந்து தேவனை துதிப்பர்.