மத்தேயு 26:31-46
துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார். வ. 31- சகரியா 13:7 காணவும். சீடர் சிதறுவது சிறிதுகாலமே. கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை வெட்டுவேன் என்பதைக் கவனிக்கவும்) பேதுருவைப் போன்று பலமுறை நாமும் உறுதி மொழி கூறுவதில் அவசரப்படுகிறோம்! இறுதிப்போரில் வெற்றிபெற இயேசு அமைதியை நாடுகிறார். வ. 38-ல் அவர் தம்துயரை முச்சீடருடன் பகிர்வதில் பயனில்லை. தனியே தம் தியாகப் பாதை செல்கிறார். மனுக்குலத்தின் பாவம் அனைத்தும் அவரை அழுத்துகின்றது. கீழ்படிந்த வாழ்க்கையின் உச்சநிலையை அவர் வேண்டுதல் வெளிப்படுத்துகிறது. வ. 41-ஜெபமின்றி மனித ஆவி சோதனையில் வெற்றிபெற இயலாது. மாம்சத்திற்கு இடங்கொடுத்து விடும். இயேசு இரண்டாம், மூன்றாம் முறை வெற்றியோடு ஜெபித்தார். வெற்றிக்கொண்ட அவர் பகைவனாம் பிசாசை மேற்கொள்ள செல்லுகிறார். கடவுள் தீயோன் மீது வெற்றிகொள்ளும் வேளை வந்தது.