1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி.
2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக வாசி.
3. இயேசுவுக்காக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்.
4. ஒவ்வொரு காரியத்தையும் குறித்து, இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று கர்த்தருக்கு முன்பாக யோசித்து உன் ஜீவியத்தை நடத்து..
5. கர்த்தரைத் தவிர வேறு யாரையும் உனக்கு மாதிரியாக வைத்துப் பாராதே.
6. உன் சுயபுத்தியோ மற்றவர்களது ஆலோசனைகளோ தேவவசனத்திற்கு வித்தியாசமானது, மாறுபட்டது என்று தோன்றினால் அதை உடனே விட்டுவிடு..
7. தேவைன மனமகிழ்ச்சியோடு ஆராதனை செய்து மகிமைப்படுத்த எப்பொழுதும் ஜாக்கிரதையாயிரு.