முன்னுரைப்பு: சங்கீதம் 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
நிறைவேறுதல்: மத்தேயு 9:2
வியாதியஸ்தரை அவர் (இயேசு) சுகப்படுத்தும் சமயங்களில் முதலாவது, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறி அவர்களைச் சுகப்படுத்தினார்.
தன்னைச் சிலுவையிலறைந்தவர்களுக்காகவும் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கனே (லூக்.23:34) என்று தான் அவாகளை மன்னித்தது மட்டுமல்லாமல் பிதாவையும் மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார்.
இப்படியாக அவரை நோக்கிக் கூப்பிட்ட யாவர் மேலும் கிருபை நிறைந்தவராயும் மன்னிக்கிறவராயுமிருந்தார்.