மார்ச் 19
மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை. பாராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே. (நியா.5:23)
இஸ்ரவேலின் படை கானானியருக்கு எதிராகப் போர் தொடுத்த வேளையில் அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்ததால், தெபோராளின் பாடல் அவர்களுக்கு எதிராகச் சாபத்தைக் கூறிற்று. ரூபன் குடிமக்களும் அதிர்ச்சியூட்டும் வெறுப்பிற்கு ஆளானார்கள். அவர்கள் நல்நோக்கம் கொண்டிருந்தனர். எனினும் மந்தையைவிட்டுச் செல்லவில்லை. கீலேயாத், ஆசேர், தாண் ஆகியோரும் போரில் ஈடுபடாத காரணத்ததினால் இகழ்ச்சிக்குரிய பெயரைப் பெற்றார்கள்.
“பெரிதான நெருக்கடியில், தர்மம் சிக்குண்ட வேளைகளில், எப்பக்கமும் சாராது இருப்போருக்கென்று நரகத்தில் கொதிக்கும் சூடான இடம் ஒதுக்கி வைக்கப்ட்டிருக்கிறது.” என்று டென்டே என்பார் கூறியுள்ளார். நீதிமொழிகள் நூலிலும் அதே எண்ணம் எதிரொலிக்கிறது. “மரணத்தக்கு ஒப்புpக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாகப் பலனளியாரோ?” என்று அங்கு படிக்கிறோம் (நீதி.24:11-12). “உண்மையான மேய்ப்பன் ஆபத்துக்காலம் என்றோ (வச.10), சோர்வடையச் செய்யும் அலுவல் என்றோ( வச.10), அறியேன் என்றோ (வச.12) கூறமாட்டான். கூலிக்கு அமர்த்தப்பட்டவனே அங்ஙனம் கூறுவான். “அன்பை எளிதாக அடக்கிவிட முடியாது. அன்புகூரும் தேவனையும் அடக்க இயலாது” என்று கிட்னர் என்பார் கருத்துரைத்துள்ளார்.
யூதர்களுக்கு எதிரான அலை, நமது நாட்டை அடித்துச் செல்லுமெனில் நாம் யாது செய்வோம்? ய+தமக்கள் சித்திரவதைக் கூடங்களுக்கும், உயிர்கொல்லி வாயு நிறைந்த அறைகளுக்கும், அக்கினிச் சூளைக்கும் கொண்டுபோகப்படுவார்களானால் நாம் என்ன செய்வோம்? அவர்களுக்கு அடைக்கலம் தர நமது உயிரைப் பணயம் வைப்போமா?
ஒருவேளை நமது உடன் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிற வேளையில், அவர்களுக்கு அடைக்கலம் தருவது கடுந்தண்டனைக்குரியது என்றால், அவர்களை நமது வீடுகளில் வரவேற்போமா? நாம் என்ன செய்வோம்?
அரியசெயல் என்று சொல்லமுடியாவிடினும், நமது நாட்களில் நடைபெறக்கூடிய ஒரு எடுத்துக்காட்டைக் காணுவோம். ஒரு கிறிஸ்தவக் கூட்டமைப்பிலே நீங்கள் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கிறீர்கள் எனக் கொள்வோம். செல்வந்தரும் செல்வாக்கு வாய்ந்தவருமாகிய வேறொரு இயக்குநருடைய வெறுப்பிற்கு ஆளான ஒரு உண்மையுள்ள ஊழியர்மீது, அச்செல்வந்தருடைய மனநிறைவிற்காக கடும் பழி சுமத்தப்படுமென்றால், நீங்கள் உங்களுடைய கைகளைக் கட்டிக்கொண்டு மௌனமாக இருப்பீர்களா?
கர்த்தராகிய இயேசுகிறிpஸ்து விசாரிக்கப்பட்ட வேளையில், யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் நாமும் ஒரு அங்கத்தினராக இருந்திருப்போமாயின் அல்லது அவர் சிலுவையில் அறையுண்டபோது அங்கே இருந்திருப்போமாயின், எப்பக்கமும் சாராது இருந்திருப்போமா? அல்லது அவரோடு நாம் நம்மை இணைத்துக்கொண்டிருப்போமா?
“மௌனம் எப்பொழுதும் பொன்னானது அல்ல. சில வேளைகளில் அது கோழைத்தனமானதாக விளங்கும் “