பெப்ரவரி 26
தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44)
மனிதனாலும் தேவனாலும் ஒரேநேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது என்றே கர்த்தர் இச்சொற்களின் வாயிலாக அறிவுறுத்துகிறார். மனிதர்களால் வரும் புகழை நாடிச் செல்வோமென்றால், நமது விசுவாச வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று வலியுறுத்துகிறார்.
இதற்கொத்த கருத்தினை அப்போஸ்தலனாகிய பவுல், ”நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” என்று கூறி மனிதனால் வரும் புகழ்ச்சியையும், தேவனால் வரும் புகழ்ச்சியையும் ஒருங்கே விரும்பவது சரியன்று என்று தெளிவுறுத்துகிறார்.
இதனை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக விளக்குகிறேன். இளைஞன் ஒருவன் இறையியலில் முதுகலைப்பட்டம் வாங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். மேலும், அதனை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பெறவேண்டும் என்று நினைத்தான். ஆனால், விசுவாசத்தைக் குறித்த அடிப்படை உண்மைகளை மறுத்துப் போதிக்கும் பல்கலைக் கழகங்களே அவ்வித அங்கீகாரததைக்; கொண்டிருந்தன. ஒருவர் தன்னுடைய பெயருக்குப் பின்னால் பட்டத்தை எழுதவேண்டுமாயின், அறிஞர்கள் என்று கருதப்படும், கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களிடமிருந்தே அதனைப் பெறவேண்டும். அதன்நிமித்தம் அப்பயிற்சியில் அவன் தீட்டுப்படுகிறான். முன்போல அவன் உறுதியுடன் பேசுவதில்லை.
இவ்வலகில் ஒரு பேரறிஞர் என்றோ, அறிவியல் மேதை என்றோ அறியப்படவேண்டுமாயின் அங்கு ஆபத்து மறைந்திருக்கும். வேதாகம அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர் ஆளாகிறார். உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய உபதேசங்களில் கண்டிப்பற்ற முறையில் நடந்துகொள்வதோடு அக்கருத்துக்களைக் குறைகூறிப் பேசவும் வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்.
வேதபாட பள்ளிகளும் அவ்வகை வேதனைக்குள்ளாகின்றன. கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தங்களது பெயரைப் பதிவு செய்வதா, வேண்டாமா என்ற எண்ணம் அவர்களை வருத்துகிறது. “அங்கீகாரம் என்னும் இச்சை வேதாகமக் கொள்கைகளை வலுவிழக்கச் செய்துவிடும். ஆவியானவரின் செயல்பாடு அற்ற மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட உலகீய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு அப்பள்ளிகள் சென்றுவிடுகின்றன.
தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுதலே தகும். அதனையே நாம் பெரிதும் நாடவேண்டும். அதற்கு மாறானதை நாடுவோமெனில் அதற்காகப் பெரிய விலைகொடுக்கவேண்டியவர்களாயிருப்போம். “சத்தியத்தை விற்று நாம் பெறும் நாணயத்தில், நிச்சயமாகவே அந்திக் கிறிஸ்துவின் உருவம் மங்கலாய்த் தெரியும்”.