பெப்ரவரி 19
மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3).
வேதாகமத்தைப் போன்றதொரு மனோதத்துவநூல் வேறு எதுவும் இல்லை. எங்கும் காணக்கிடைக்காத, மனிதனின் நடத்தையைக் குறித்த வெளிச்சத்தை வேதம் தருகின்றது. எடுத்துக்காட்டாக இங்கே ஒரு மனிதனைக் காண்கிறோம். அவனுடைய வழி தாறுமாறானது, அது அவனுடைய வாழ்வினை உடைத்துப் போட்டது. ஆயினும் தன் குற்றத்தை, தன்தோளில் சுமப்பதை விடுத்து, கர்த்தர் முகமாகத் திருப்பி, தன் எரிச்சலைக் கொட்டுகிறான்.
இது பலருடைய வாழ்வில் எத்தனை உண்iமாய் இருக்கிறது! தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கைசெய்யும் பலர், பின்னர் கேவலமான பாலியல் குற்றங்களில் சிக்கிக்கொள்வதைக் காண்கிறோம். இது அவர்கட்கு அவமானத்தையும், அவகீர்த்தியையும், பொருளாதாரக்குறைவையும் ஏற்படுத்துகிறது. என்றாலும் அவர்கள் மனம்திரும்புகிறார்களா? இல்லை. கிறிஸ்துவை எதிர்த்து நிற்கின்றனர். தாங்கள் செய்த விசவாச அறிக்கையை மறுத்துரைக்கின்றனர். நாத்தீக தீவிரவாதிகளாக மாறிவிடுகின்றனர்.
நாம் அறிந்திருப்பதற்கு அதிகமாகவே கிறிஸ்துவை மறுத்துக்கூறும் செய்கையின் வித்து ஒழுக்கக்கேட்டினில் தொடங்குகிறது எனஇபதைக் காணமுடியும். யு. து. போலக் என்பவர் தான் சந்தித்த ஒரு இளைஞனைப்பற்றிக் கூறியதாவது, வேதத்தைப் பற்றிய பலவிதமான ஐயங்களையும் மறுப்புக்கைளயும் கனல்தெறிக்கக் கொட்டினான். அப்பொழுது போலக் அவனை நோக்கி, என்ன விதமான பாவத்தில் நீ ஈடுபட்டிருக்கிறாய்? என்ற வினவினார். இக் கேள்வியைச் செவிமடுத்த இளைஞன், மனமுடைந்தவனாகத் தனது வாழ்கையில் ஏற்பட்ட கேவலானதும் வெட்கக்கேடானதுமான பாவத்தைக் குறித்து அறிக்கைசெய்தான்.
தன்னுடைய பாவங்களில் விளைவாகவே, மனிதன் கர்த்தருக்கு விரோதமாகச் சினங்கொண்டு பொங்கி எழுகிறான். இதனை று. கு. அடேனி என்பார், தேவன் தடைசெய்த செய்கைகளைச் செய்துவிட்டு அதற்குக் காரணம் அவருடைய அருளுப்பாடே என்று குற்றப்படுத்திக் கற்பிப்பது மனிதனின் இராட்சதத்தனமாகும் என்று எழுதியுள்ளார். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் என்னும் கூற்று எத்தனை உண்மையாய் இருக்கிறது. இதனை அப்போஸ்தலனாகிய பேதுரு கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, ….. மனதார அறியாமல் இருக்கிறார் என்று கூறி நினைவுபடுத்துகிறார்.
போலக் என்பார் தமது கருத்தை இவ்வாறு விபரிக்கிறார். தேவனுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவதும், தவறுவதும், பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டின் விளைவே என்னும் பேருண்மையை இது வெளிப்படுத்துகிறது. பொதுவாக, மனிதர்கள் தங்களுடைய பாவத்தை விட்டுவிட மறுக்கின்றனர். அதனோடு தொடர்ந்து செல்வதிலேயே நாட்டங்கொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுடைய மாம்சீகம் இயற்கையாகவே தேவனிடத்தில் வெறுப்புக்கொண்டிருக்கிறது. ஒளி ஆராய்ந்து பார்க்கும். வேதம் பாவத்தைத் தடைசெய்யும். ஆயின், இவற்றை மனிதன் விரும்புவதில்லை, எதிர்த்து நிற்கின்றான். இதயத்தைப்போல, தலை அவ்வளவு கேடு நிறைந்தது அன்று.