ஜனவரி 26
பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11)
கட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு என்று நாம் நினைத்துக்கொள்ளலாகாது. அன்புகூர வேண்டுமென்று நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நாம் அறியாதபடி நழுவிச் செல்கிறதாகவும், அங்குமிங்கும் எப்போதாவது ஏற்படுகிற உணர்வாகவும், ஜலதோஷத்தைப் போன்றும் அன்பு இருக்குமென்றால் இக்கட்டளையை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகிவிடும். அன்பு உணர்ச்சிப் பெருக்கு உடையதாக இருப்பினும், அது ஒருவருடைய உணர்ச்சியை அ
கற்பனைக் கோட்டையென்னும் உலகத்தில் மட்டுமே அன்பு காணப்படும் என்றும், அனுதின வாழ்க்கயைனி; இன்றியமையாத செயல்களுக்கும் அன்பிற்கும் எவ்வித உறவும் இல்லையென்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. நீலவொளி, நறுமணப்பூக்கள் இவை சிலமணிநேரம் நம் வாழ்வில் உண்டாவது போல, தரையைக் கழுவுதல், அழுக்கான பாத்திரங்களைக் கழுவுதல் ஆகிய செயல்களும் நம் வாழ்வில் உண்டாகும்.
உத்வேகத்துடன் செயல்படக்கூடியது என்றும், அன்பைக்குறித்துக் கூறலாம். எடுத்துக்காட்டாக பழங்கள் பரிமாறுகின்றபோது அடிபட்ட பழத்தை அன்பு எடுத்துக்கொள்ளும். கை கழுவும் தொட்டியையும், குளியல் தொட்டியையும் பயன்படுத்தியபின்னர் கழுவிச் சுத்தம் செய்யும். தேவையற்ற நேரங்களில், எரியும் விளக்குகளை அன்பு அணைக்கும். தரையில் கிடக்கும் குப்பையை எடுத்துக் குப்பையில் போடும். வாகனத்தைக் கடன்வாங்கித் திருப்பித்தரும்போது எரிபொருளை நிரப்பிக்கொடுக்கும். உணவு அருந்துவதற்கு அமர்ந்திருக்கையில் மற்றவர்களுக்கு முதலில் பரிமாறும். கூட்டங்கள் நடக்கும்போது சத்தமிடும் குழந்தைகளை வெளியே எடுத்துச்சொல்லும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது. செவிடர்கள் கேட்கத்தக்கதாக அன்பு சத்தமாகப் பேசும். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கும்.