டிசம்பர் 2
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19)
இங்கு பாடல் பாடுதல் ஆவியின் நிறைவோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது. ஆவியின் நிறைவினால் பாடல்கள் எழும் என்பதன் அடிப்படையில் இங்ஙனம் கூறப்பட்டிருக்கிறது. ஆகவேதான், வரலாற்றில் காணும் கிறிஸ்தவ மறுமலர்ச்சிகள் யாவும் பாடல்களோடு இணைந்து வந்துள்ளனபோலும். வேல்ஸ் மறுமலர்ச்சி இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கிறிஸ்தவர்களைப்போன்று வேறு எவரும் இவ்வளவாகப் பாடினதில்லை. கிறிஸ்தவர்கள் பெற்றுள்ளது போன்று வேறு எவரும் சங்கீதங்கள், கீர்த்தனைகள், ஞானப்பாட்டுக்கள் ஆகிய பாரம்பரிய செல்வத்தைப் பெற்றதில்லை. நாம் அவ்வப்போது உணர்ந்தும் நம்மால் வெளிப்படுத்த முடியாதவற்றை நமது கீர்த்தனைகள் மகத்தவமான மொழியில் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளைச் சில கீர்த்தனைகள் வெளிப்படுத்துகின்றன. “ஒப்புவிக்கிறேன் இயேசுவுக்கே ஒப்புவிக்கிறேன்” என்னும் பாடல் அவற்றில் ஒன்று. இன்னும் சில பாட்டுக்களில் நிறைவான சமர்ப்பணம் பேசப்படுகின்றது. அப்படிப் பாடுகின்ற வேளையில் நமது இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறோம்.
ஆவிக்குரிய பாடல்களைப் பாடுங்கால் இசையொழுக்கோ, இசை இனிமையோ கணக்கிடப்படுவதில்லை. இருதயத்தின் ஆழத்தினின்று செய்தியானது எழுந்து, தூய ஆவியானவரின் வல்லமையோடு விண்ணுலகத் தந்தையைச் சென்றடைவதே இன்றியமையாததாகும். கர்த்தாவே பாடல் எவ்வளவு இனிமையுடையதாக இருக்கிறது என்பது பொருட்டன்று என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆவியினால் கற்பிக்கப்பட்டால் ஒழிய எந்த இருதயமும் உமக்கு இனிமையைக் கொண்டுவருவதில்லை என மேரி பௌலே என்பார் கூறி இவ்வுண்மையை விளக்கியுள்ளார்.
தேவ ஆவியானவர் எங்ஙனம் திருமறையை ஒருவர் பிரசங்கிக்கும்போது பயன்படுத்துகிறாரோ, அதுபோன்றே பாடல்களையும் அவர் பயன்படுத்துகிறார். கிரேட்டன் கின்னஸ் என்பாரின் தாயார், வயல்வெளியில் உழுதுகொண்டிருந்த உழவர் ஒருவர் பாடின பாடலைக்கேட்டு, ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்னும் தனது எண்ணத்தைக் கைவிட்டார். முனைவர் கின்னஸ் பிற்காலத்தில் இவ்வாறு கூறினார்: முற்றிலும் நான் தேவனுக்குச் சொந்தம். அந்தக் கிறிஸ்தவ உழவர் தனது தாழ்மையான உழைப்போடு, கர்த்தரைத் துதித்துப் பாடினார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
இருவகை ஆபத்துகளினின்றும் இசை நிகழ்ச்சி ஊழியம் செய்வோர் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். முதலாவது சுயம் அவர்களைப் பற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வெளியரங்கமாக ஆற்றப்படுகின்ற மற்ற ஊழியங்களைப்போலவே, இதிலும் மிகப்பெரிய சுயம் என்னும் மாயையில் ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வது எளிது. அவர் தனது சொந்தத் திறமையை வெளிப்படுத்து மக்களைக் கவரவேண்டும் என்னும் சோதனைக்கள் அகப்பட்டுக்கொள்வார். ஆனால், தேவ மக்களின் நற்பேற்றைக் கருத்திற்கொண்டு தேவ மகிமைக்காகப் பாடுவதே சாலவும் சிறந்தது.
இரண்டாவது, மற்றவர்களுக்குப் படிப்பினைய+ட்டுவதற்கு மாறாக மகிழச் செய்வதற்காக மட்டும் பாடுவதாகும். மகத்துவமான இசை ஞானத்தோடு ஒருவரால் பாடக்கூடும். ஆயின், கேட்போராது உள்ளங்களை தேவசெய்தி சென்றடையத்தக்கதாகப் பாடுவதே சிறந்ததாகும். நாம் அன்புகூருகிற கர்த்தருக்குத் தகுதியற்றதும், கருத்துச் செறிவு அற்றதும், கேட்பொர் உணர்ச்சிகளை எழும்பிவிடக் கூடியதுமான பாடல்களைப் பாட ஒருவரால் கூடும். ஆயின் அதில் என்ன பயன்?
வௌ;வேறு பண்பாட்டில் வௌ;வேறு இசை நாட்டம் உண்டாயிருக்கும். ஆனாலும் எல்லா பண்பாட்டிலும் பாடல்கள் வேதஉபதேசங்களைக் கொண்டதாகவும், தேவ மகிமையைப் பறைசாற்றுவதாகவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் இருக்கவேண்டும்.