இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும், நாள்தோறும் இரவும் பகலும் ஜெபித்தார். தானியேல் தினமும் மூன்று வேளை ஜெபித்தார்.
நமக்கு பரலோகத்தில் ஒரு பிதா இருக்கிறார். அவர் ஜெபத்தை கேட்கிறவர். அது அவரது பண்புநலம். அவர் ஜெபித்த கட்டளையிட்டுள்ளார். அதற்கு பதிலளிப்பேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். சோர்ந்து போகாமல் ஜெபிக்கவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், விழித்திருற்து ஜெபிக்கவும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அனைத்துக்காகவும், அனைவருக்காகவும் கவலைப்படாமலும் சந்தேகப்படாமலும் ஜெபிக்கும்படி கூறப்படுகிறது. கர்த்தர் நமக்கு மாதிரியை முன்வைத்தார்.
கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான் (யாக் 4:2). அவர்கள்அப்போது மகிழ்ச்சியடைகிறார்கள் (1யோவா 16:24). தெய்வீக சமாதானத்தால் ஆட்கொள்ளப்பட்டு கவலை மறந்து பரவசமடைகிறார்கள் ( பிலி 4:6-7)
விசுவாசத்துடனும் தேவ சித்தத்தின்படியும் ஜெபங்களை ஏறெடுக்கத் தெரிந்திருப்பது, விரைவில் பதிலைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும். இதற்கு மிக அடிப்படையாக இருப்பது அர்ப்பணமுள்ள வாழ்வு (ரோம 12:1-2).
மறுரூப மனமுடையோர், மகிபனின் கரங்களிலிருந்து மலையென காரியங்களைப் பெறுவர். அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக, கனிநிறைந்து வாழ்வர்.
எனவே இடைவிடாது ஜெபம் பண்ணுவோம். இடைவிடாது போராடுவோம்- இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே!