நாகூம் 1:1-15
முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ. 2-8): கடவுளின் மாபெரும் பண்புகளும், மாவல்ல செயல்களும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வதிகாரத்தில் கர்த்தர் என்ற சொல்லைப்பலமுறை கவனிக்கவும். இஸ்ரவேலை அழித்து, யூதாவையும் அழிக்கும்படி அச்சுறுத்திய அசீரியப் பேரரசின் காலத்தில் வாழ்ந்தபோதும், கடவுளின் மக்களைச் சேர்ந்த நாகூமின் செய்தியில் மையமாயிருப்பது கர்த்தரே! கடவுளின் இரு முகங்கள் இங்கு காட்டப்படுகின்றன. எரிச்சலுள்ள அவர் நீடிய சாந்தமும் உள்ளவர். ஆனால், நீதியைச் சரிக்கட்டத் தவறாத அவர் தன்னை நம்புவோருக்கே நல்லவர். அவர் முன்னுரைப்பது (வ. 9-11): சனகெரிப்பின் படையெடுப்பு முன் கூறப்படுகிறது, (வ. 11). ஆனாலும் நினிவே தம்முடைய சத்துருக்களுக்கும் பிரதிபலன் அளிக்கிற (வ. 2) கர்த்தரின் சினத்திற்குத் தப்பாது. நினிவேயின் பாவம் கர்த்தருக்கு விரோதமாக நினைத்தல் (வ. 9). புரண்டு வரும் வெள்ளத்தால் (வ. 8 ) மதுபான வெறி கொண்டிருக்கையிலே (வ. 10) நனிவே அழிக்கப்பட்டது. அவரது ஆறுதல் (வ. 12-15): ஒடுக்குகிற அசீரியன் அழிக்ப்படுவான் என்ற நற்செய்தி யூதாவிற்குக் கூறப்படுகிறது.